• Apr 14 2026

வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளில் நாளை முதல் கனமழை - இடி, மின்னல் எச்சரிக்கை

Chithra / Mar 17th 2026, 8:32 pm
image

வெப்பச்சலன செயற்பாடு மற்றும் கிழக்கு திசைக் காற்று முறிவின் காரணமாக நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது  என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில்,


குறிப்பாக கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளுக்கு கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 


இது வெப்பச் சலன செயற்பாட்டினால் கிடைக்கும் மழை என்பதனால் இடியுடன் கூடிய மழையாகவே இது கிடைக்கும் வாய்ப்புள்ளது. 


ஆகவே இடி மின்னல் நிகழ்வுகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என அறிவுறுத்தியுள்ளார்.


வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளில் நாளை முதல் கனமழை - இடி, மின்னல் எச்சரிக்கை வெப்பச்சலன செயற்பாடு மற்றும் கிழக்கு திசைக் காற்று முறிவின் காரணமாக நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது  என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில்,குறிப்பாக கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளுக்கு கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இது வெப்பச் சலன செயற்பாட்டினால் கிடைக்கும் மழை என்பதனால் இடியுடன் கூடிய மழையாகவே இது கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே இடி மின்னல் நிகழ்வுகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement