நுகேகொடை பேரணி அரசாங்கத்திற்கு எந்தவித சவாலாகவும் அமையாது என நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சுசில் ரணசிங்க, கந்தளாய் நகரில் நிலவும் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாகப் பரிசீலிப்பதற்காக இன்று கந்தளாய் நீர் வழங்கல் சுத்திகரிப்பு நிலையத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.
அமைச்சர் தனது விஜயத்தின்போது, நீர் வழங்கல் திணைக்களத்துக்கு சொந்தமான பல கட்டிடங்களையும் வசதிகளையும் நேரடியாக ஆய்வு செய்தார்.
சேவைத் தடங்கல்கள், பராமரிப்பு பிரச்சனைகள் மற்றும் உடனடித் தீர்வு காணப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.
இந்த விஜயத்தின்போது இன்று நடைபெறவுள்ள நுகேகொடை பேரணி குறித்து ஊடகங்கள் முன்வைத்த கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.அவர் இதன்போது தெரிவிக்கையில்
நுகேகொட பேரணி மக்களால் நிராகரிக்கப்பட்ட சில குழுக்களால் நடத்தப்படுகிறது. அவர்கள் ஏற்கனவே மக்களின் அவமதிப்பையும் நிராகரிப்பையும் சந்தித்துள்ளனர். அதனால்தான் நுகேகொட பகுதிக்குச் செல்லும் வீதிகளில் பல இடங்களில் மக்கள் புல்லை தொங்கவிட்டுள்ளனர். இது அரசாங்கம் மூலம் செய்யப்பட்டதாகக் கூற முடியாது.
அந்தக் குழுக்களுக்கு மிகச் சிறிய அளவிலான ஆதரவு வட்டம் மட்டுமே உள்ளது. அவர்களில் சிலர் பங்கேற்றாலும், இந்தப் பேரணி அரசாங்கத்திற்கு எந்தவித சவாலாகவும் அமையாது.
மேலும், தற்போது உயர்தரப் பரீட்சை நடைபெற்று வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, “பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தினால், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்,” என அமைச்சர் சுசில் ரணசிங்க வலியுறுத்தினார்.
அமைச்சரின் இந்த விஜயத்தின்போது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, கந்தளாய் பிரதேச சபை பிரதித் தலைவர், மற்றும் பல அரசு அதிகாரிகளும் உடன் கலந்து கொண்டனர்.
நுகேகொடை பேரணி அரசாங்கத்திற்கு எந்தவித சவாலாகவும் அமையாது அநுர அரசு பதிலடி நுகேகொடை பேரணி அரசாங்கத்திற்கு எந்தவித சவாலாகவும் அமையாது என நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சுசில் ரணசிங்க, கந்தளாய் நகரில் நிலவும் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாகப் பரிசீலிப்பதற்காக இன்று கந்தளாய் நீர் வழங்கல் சுத்திகரிப்பு நிலையத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.அமைச்சர் தனது விஜயத்தின்போது, நீர் வழங்கல் திணைக்களத்துக்கு சொந்தமான பல கட்டிடங்களையும் வசதிகளையும் நேரடியாக ஆய்வு செய்தார்.சேவைத் தடங்கல்கள், பராமரிப்பு பிரச்சனைகள் மற்றும் உடனடித் தீர்வு காணப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.இந்த விஜயத்தின்போது இன்று நடைபெறவுள்ள நுகேகொடை பேரணி குறித்து ஊடகங்கள் முன்வைத்த கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.அவர் இதன்போது தெரிவிக்கையில் நுகேகொட பேரணி மக்களால் நிராகரிக்கப்பட்ட சில குழுக்களால் நடத்தப்படுகிறது. அவர்கள் ஏற்கனவே மக்களின் அவமதிப்பையும் நிராகரிப்பையும் சந்தித்துள்ளனர். அதனால்தான் நுகேகொட பகுதிக்குச் செல்லும் வீதிகளில் பல இடங்களில் மக்கள் புல்லை தொங்கவிட்டுள்ளனர். இது அரசாங்கம் மூலம் செய்யப்பட்டதாகக் கூற முடியாது.அந்தக் குழுக்களுக்கு மிகச் சிறிய அளவிலான ஆதரவு வட்டம் மட்டுமே உள்ளது. அவர்களில் சிலர் பங்கேற்றாலும், இந்தப் பேரணி அரசாங்கத்திற்கு எந்தவித சவாலாகவும் அமையாது.மேலும், தற்போது உயர்தரப் பரீட்சை நடைபெற்று வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, “பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தினால், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்,” என அமைச்சர் சுசில் ரணசிங்க வலியுறுத்தினார்.அமைச்சரின் இந்த விஜயத்தின்போது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, கந்தளாய் பிரதேச சபை பிரதித் தலைவர், மற்றும் பல அரசு அதிகாரிகளும் உடன் கலந்து கொண்டனர்.