திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றுடன் (08) 22 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கமைய இன்றைய போராட்டம் திருகோணமலை மாவட்டச் செயலகம் முன்னால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக அபகரிக்கப்பட்டதையடுத்து தொடர் போராட்டத்தில் தீர்வு கிடைக்கும் வரை ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி, திருகோணமலையின் நிலங்களையும் வளங்களையும் சூரையாடுவதை நிறுத்து, எங்களை வாழ விடு, விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு, அரசே நிறுவனங்களை வைத்து 352 விவசாயிகளை வீதிக்கு இறக்காதே போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு இவ் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் விவசாயிகள் குதித்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கும் போது பிரதமரின் பிரதிநிதி ஒருவர் ரொசான் எம்.பி தலைமையில் இங்கு தெரிவித்ததாவது,
விவசாயிகளின் விபரங்களை திரட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஒக்டோபர் 20 வரை கால அவகாசம் தாருங்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் எமக்கு நம்பிக்கை இல்லை கம்பனிகளிடமிருந்து நஷ்ட ஈட்டு பெற்றுத் தருவதாக கூறினர் மேலும் கிராம சேவகர் திரட்டும் தகவல் போன்றவற்றை வைத்து பார்த்தால் பொய்யானதே எனவே உத்தியோகபூர்வமாக அறிவித்து எமது நிலத்தை விவசாயிகளாகிய எங்களுக்கு தாருங்கள் எனவும் தெரிவித்தனர்.
வேண்டாம்,வேண்டாம் பொய் வாக்குறுதி; 22 ஆவது நாளாக தொடரும் முத்துநகர் விவசாயிகள் போராட்டம் திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்றுடன் (08) 22 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கமைய இன்றைய போராட்டம் திருகோணமலை மாவட்டச் செயலகம் முன்னால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக அபகரிக்கப்பட்டதையடுத்து தொடர் போராட்டத்தில் தீர்வு கிடைக்கும் வரை ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டத்தில் வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி, திருகோணமலையின் நிலங்களையும் வளங்களையும் சூரையாடுவதை நிறுத்து, எங்களை வாழ விடு, விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு, அரசே நிறுவனங்களை வைத்து 352 விவசாயிகளை வீதிக்கு இறக்காதே போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு இவ் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் விவசாயிகள் குதித்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கும் போது பிரதமரின் பிரதிநிதி ஒருவர் ரொசான் எம்.பி தலைமையில் இங்கு தெரிவித்ததாவது, விவசாயிகளின் விபரங்களை திரட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஒக்டோபர் 20 வரை கால அவகாசம் தாருங்கள் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் எமக்கு நம்பிக்கை இல்லை கம்பனிகளிடமிருந்து நஷ்ட ஈட்டு பெற்றுத் தருவதாக கூறினர் மேலும் கிராம சேவகர் திரட்டும் தகவல் போன்றவற்றை வைத்து பார்த்தால் பொய்யானதே எனவே உத்தியோகபூர்வமாக அறிவித்து எமது நிலத்தை விவசாயிகளாகிய எங்களுக்கு தாருங்கள் எனவும் தெரிவித்தனர்.