வவுனியாவில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் அதிபர் வெற்றிடம் காணப்பட்ட சூழ்நிலையில் புதிய அதிபர் நியமனம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் அதிபராக கடமையாற்றிய திருமதி.ரட்ணாதேவி ரமேஸ் அவர்கள் ஓய்வு பெற்ற போது திருமதி இந்துமதி குணரூபன் , தற்காலிகமாக அதிபராக கடமையாற்றி வந்தார்.
இந்த சூழ்நிலையில் பாடசாலையில் காணப்பட்ட அதிபர் வெற்றிடத்திற்கு தற்போது திருமதி.சத்தியாதேவி நந்தசேன புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமதி.சத்தியாதேவி நந்தசேன வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் 1997ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரை ஆசிரியராக கடமைபுரிந்து பின்னர்; 2010ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டு வரை பிரதி அதிபராக கடையாற்றியுள்ளார்.
இதன் பின்னர் அதிபராக 2011ம் ஆண்டு நியமனம் பெற்று வவுனியா கணேசபுரம் சண்முகாநந்தா வித்தியாலயத்தில் 2018ம் ஆண்டு வரை தனது சேவையினையாற்றி பின்னர் 2018ம் ஆண்டு அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலயத்தில் 2025ம் ஆண்டு காலப்பகுதி வரை அதிபராக சேவையாற்றி மீண்டும் அதிபர் தரம் 1 இல் வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரிக்கு அதிபராக சேவையாற்றுவதற்கு நியமனம் பெற்று வந்துள்ளார்.
வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியானது வவுனியாவில் காணப்படும் பிரசித்தமான பாடசாலைகளில் ஒன்றாகக் காணப்படுவதுடன் பல புத்தியீவிகளை இச்சமூகத்திற்கு வழங்கிவரும் பாடசாலையாகும். திருமதி.சத்தியாதேவி நந்தசேன வருகை பாடசாலை சமூகத்திற்கு மகிழ்வினை ஏற்படுத்தியுள்ளதுடன் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் புதிய அதிபருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் பாடசாலையின் பழைய மாணவர்கள் புதிய அதிபரை சந்தித்து தமது வாழ்த்தினையும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரிக்கு புதிய அதிபர் பதவியேற்பு வவுனியாவில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் அதிபர் வெற்றிடம் காணப்பட்ட சூழ்நிலையில் புதிய அதிபர் நியமனம் இடம்பெற்றுள்ளது.வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் அதிபராக கடமையாற்றிய திருமதி.ரட்ணாதேவி ரமேஸ் அவர்கள் ஓய்வு பெற்ற போது திருமதி இந்துமதி குணரூபன் , தற்காலிகமாக அதிபராக கடமையாற்றி வந்தார். இந்த சூழ்நிலையில் பாடசாலையில் காணப்பட்ட அதிபர் வெற்றிடத்திற்கு தற்போது திருமதி.சத்தியாதேவி நந்தசேன புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருமதி.சத்தியாதேவி நந்தசேன வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் 1997ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரை ஆசிரியராக கடமைபுரிந்து பின்னர்; 2010ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டு வரை பிரதி அதிபராக கடையாற்றியுள்ளார். இதன் பின்னர் அதிபராக 2011ம் ஆண்டு நியமனம் பெற்று வவுனியா கணேசபுரம் சண்முகாநந்தா வித்தியாலயத்தில் 2018ம் ஆண்டு வரை தனது சேவையினையாற்றி பின்னர் 2018ம் ஆண்டு அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலயத்தில் 2025ம் ஆண்டு காலப்பகுதி வரை அதிபராக சேவையாற்றி மீண்டும் அதிபர் தரம் 1 இல் வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரிக்கு அதிபராக சேவையாற்றுவதற்கு நியமனம் பெற்று வந்துள்ளார்.வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியானது வவுனியாவில் காணப்படும் பிரசித்தமான பாடசாலைகளில் ஒன்றாகக் காணப்படுவதுடன் பல புத்தியீவிகளை இச்சமூகத்திற்கு வழங்கிவரும் பாடசாலையாகும். திருமதி.சத்தியாதேவி நந்தசேன வருகை பாடசாலை சமூகத்திற்கு மகிழ்வினை ஏற்படுத்தியுள்ளதுடன் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் புதிய அதிபருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.மேலும் பாடசாலையின் பழைய மாணவர்கள் புதிய அதிபரை சந்தித்து தமது வாழ்த்தினையும் தெரிவித்துள்ளனர்.