2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டண திருத்தம் இன்று (09) அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் வகையில் திருத்தப்பட்ட மின் உற்பத்தி செலவு மதிப்பீடு, தேசிய முறைமை இயக்குநர் (National System Operator) நிறுவனத்தால் அண்மையில் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக மின் உற்பத்தி செலவு உயர்ந்ததே, இந்த கட்டண திருத்த கோரிக்கைக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான பொது கருத்துக் கேட்பு அமர்வும் அண்மையில் நிறைவடைந்துள்ளது.
எனினும், தரமற்ற நிலக்கரியால் ஏற்படும் இழப்புகளை மின்சாரக் கட்டணத்தில் சேர்க்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், 2026 இரண்டாம் காலாண்டு மின்சாரக் கட்டண திருத்தத்தை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி மின்சாரக் கட்டணத்தை 8 சதவீதம் முதல் 14.4 சதவீதம் வரை உயர்த்தும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய அறிவிப்பு மூலம் புதிய மின்சாரக் கட்டண விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சாரக் கட்டணத்தில் புதிய மாற்றமா. இன்று வெளியாகும் அறிவிப்பு 2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டண திருத்தம் இன்று (09) அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் வகையில் திருத்தப்பட்ட மின் உற்பத்தி செலவு மதிப்பீடு, தேசிய முறைமை இயக்குநர் (National System Operator) நிறுவனத்தால் அண்மையில் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக மின் உற்பத்தி செலவு உயர்ந்ததே, இந்த கட்டண திருத்த கோரிக்கைக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான பொது கருத்துக் கேட்பு அமர்வும் அண்மையில் நிறைவடைந்துள்ளது.எனினும், தரமற்ற நிலக்கரியால் ஏற்படும் இழப்புகளை மின்சாரக் கட்டணத்தில் சேர்க்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மேலும், 2026 இரண்டாம் காலாண்டு மின்சாரக் கட்டண திருத்தத்தை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி மின்சாரக் கட்டணத்தை 8 சதவீதம் முதல் 14.4 சதவீதம் வரை உயர்த்தும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய அறிவிப்பு மூலம் புதிய மின்சாரக் கட்டண விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.