"பிடியளவு கமநிலத்திற்கு” எனும் தொனிப்பொருளின் கீழ், உணவினால் பாதுகாக்கப்பட்டதொரு தேசத்தை உருவாக்கும் பொருட்டு, பயிரிடப்படாத, சகல கமத்தொழில் காணிகளையும் வினைத்திறனாகப் பயிர்செய்கையில் ஈடுபடுத்தல் எனும் தேசிய வேலைத்திட்டம் கிண்ணியா - குறிஞ்சாகேணி கமநல சேவை பிரிவிலும் நேற்றையதினம் (11) இடம்பெற்றது.
குறிஞ்சாகேணி கமநல சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். ஜே. எம். சாஜித் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
குறிஞ்சாகேணி பிரதேச கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இதுவரை பயிர் செய்யப்படாத, வயல் காணிகள் மற்றும் மேட்டுநில காணிகள் கமநல சேவை அதிகாரிகளினால் அடையாளம் ஏற்கனவே காணப்பட்டு, விவசாயிகளுக்கு அறிவித்தல் கடிதங்கள் வழங்கப்பட்டதோடு, தரிசு நிலங்களில் பயிர்ச் செய்கை செய்யாமைக்கான காரணங்களும் கேட்டறியப்பட்டது.
இதற்கிணங்க, நேற்றைய தினம், அடையாளம் காணப்பட்ட இந்த நிலங்களில், பயிர் செய்வதற்காக தேவையான முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, இது தொடர்பாக விவசாயிகளுக்கு தெளிவூட்டல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
இத் தேசிய வேலைத்திட்ட நிகழ்வில், விவசாய போதனாசிரியர்கள், கமநல சேவை திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பிரதேச விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிண்ணியாவில் 'பிடியளவு கமநிலத்திற்கு' தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு. "பிடியளவு கமநிலத்திற்கு” எனும் தொனிப்பொருளின் கீழ், உணவினால் பாதுகாக்கப்பட்டதொரு தேசத்தை உருவாக்கும் பொருட்டு, பயிரிடப்படாத, சகல கமத்தொழில் காணிகளையும் வினைத்திறனாகப் பயிர்செய்கையில் ஈடுபடுத்தல் எனும் தேசிய வேலைத்திட்டம் கிண்ணியா - குறிஞ்சாகேணி கமநல சேவை பிரிவிலும் நேற்றையதினம் (11) இடம்பெற்றது.குறிஞ்சாகேணி கமநல சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். ஜே. எம். சாஜித் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.குறிஞ்சாகேணி பிரதேச கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இதுவரை பயிர் செய்யப்படாத, வயல் காணிகள் மற்றும் மேட்டுநில காணிகள் கமநல சேவை அதிகாரிகளினால் அடையாளம் ஏற்கனவே காணப்பட்டு, விவசாயிகளுக்கு அறிவித்தல் கடிதங்கள் வழங்கப்பட்டதோடு, தரிசு நிலங்களில் பயிர்ச் செய்கை செய்யாமைக்கான காரணங்களும் கேட்டறியப்பட்டது.இதற்கிணங்க, நேற்றைய தினம், அடையாளம் காணப்பட்ட இந்த நிலங்களில், பயிர் செய்வதற்காக தேவையான முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, இது தொடர்பாக விவசாயிகளுக்கு தெளிவூட்டல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.இத் தேசிய வேலைத்திட்ட நிகழ்வில், விவசாய போதனாசிரியர்கள், கமநல சேவை திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பிரதேச விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.