• Jun 21 2025

தேசிய மக்கள் சக்தி பிரபாகரனுடனும் கூட்டணியமைக்கும்! - நளின் பண்டார குற்றச்சாட்டு

Chithra / Jun 21st 2025, 3:35 pm
image

  

அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பிரபாகரனுடனும் கூட்டணி அமைக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். 

நளின் பண்டார மேலும் கூறுகையில், 

ஊழல் மோசடியாளர்களுடன் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற அதிகாரசபைகளில் ஆட்சியமைப்பதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது. 

குருநாகல் மாநகர சபை முதல்வராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தெரிவாகியுள்ளார். 

பிரதி முதல்வராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் மீது பல ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

கரண்ணாகொட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் அசாப்தீன் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தற்போதைய அரசாங்கம் செயற்படுத்துமா? அதிகாரத்துக்காக பிரபாகரனுடனும் கூட்டணியமைத்துக்கொள்ளும் நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது, என அவர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி பிரபாகரனுடனும் கூட்டணியமைக்கும் - நளின் பண்டார குற்றச்சாட்டு   அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பிரபாகரனுடனும் கூட்டணி அமைக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். நளின் பண்டார மேலும் கூறுகையில், ஊழல் மோசடியாளர்களுடன் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற அதிகாரசபைகளில் ஆட்சியமைப்பதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது. குருநாகல் மாநகர சபை முதல்வராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தெரிவாகியுள்ளார். பிரதி முதல்வராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மீது பல ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கரண்ணாகொட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் அசாப்தீன் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தற்போதைய அரசாங்கம் செயற்படுத்துமா அதிகாரத்துக்காக பிரபாகரனுடனும் கூட்டணியமைத்துக்கொள்ளும் நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது, என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement