• Apr 18 2026

நாச்சிமார் கோவில் குளம் துப்பரவு பணிகள் முதல்வர் மதிவதனி தலைமையில் ஆரம்பம்!

Ziya / Apr 1st 2026, 4:53 pm
image

வண்ணார்பண்ணை வடக்கு முதலாம் வட்டாரம் மாநகர நாச்சிமார் கோவில் குளம் துப்பரவு பணிகளை மாநகர முதல்வர் வி.மதிவதனி  ஆரம்பித்து வைத்துள்ளார்.

வட்டார உறுப்பினர் எஸ்.நிசாந்தன் கோரிக்கையில் சுகாதாரக் குழுத் தலைவர்.எஸ்.சாரூபன்  ஒழுங்கமைப்பில் மேற்படி விசேட வேலைத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

மேற்படி வேலைத்திட்டத்தின் ஊடாக குளத்தில் படர்ந்திருந்த குளத்தாவரங்கள் மற்றும் குளத்தில் நீண்டகாலமாக காணப்படும் கழிவுகள் மாநகர பொதுச்சுகாதார ஊழியர்கள் ஊடாக அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மேற்படி விசேட வேலைத்திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வில் பிரதி முதல்வர் இ.தயாளன், மராமத்துக்குழு தலைவர் மயூரன், மாநகரசபை பிரதம கணக்காளர், மாநகரசபை உறுப்பினர்களான தனிஸ்ரன், றொபின்சன், யேசுராசா, அப்துல்லா, மதுகான், மாநகர சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் அப்பகுதி சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் கோவில் நிர்வாக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாச்சிமார் கோவில் குளம் துப்பரவு பணிகள் முதல்வர் மதிவதனி தலைமையில் ஆரம்பம் வண்ணார்பண்ணை வடக்கு முதலாம் வட்டாரம் மாநகர நாச்சிமார் கோவில் குளம் துப்பரவு பணிகளை மாநகர முதல்வர் வி.மதிவதனி  ஆரம்பித்து வைத்துள்ளார்.வட்டார உறுப்பினர் எஸ்.நிசாந்தன் கோரிக்கையில் சுகாதாரக் குழுத் தலைவர்.எஸ்.சாரூபன்  ஒழுங்கமைப்பில் மேற்படி விசேட வேலைத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.மேற்படி வேலைத்திட்டத்தின் ஊடாக குளத்தில் படர்ந்திருந்த குளத்தாவரங்கள் மற்றும் குளத்தில் நீண்டகாலமாக காணப்படும் கழிவுகள் மாநகர பொதுச்சுகாதார ஊழியர்கள் ஊடாக அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.மேற்படி விசேட வேலைத்திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வில் பிரதி முதல்வர் இ.தயாளன், மராமத்துக்குழு தலைவர் மயூரன், மாநகரசபை பிரதம கணக்காளர், மாநகரசபை உறுப்பினர்களான தனிஸ்ரன், றொபின்சன், யேசுராசா, அப்துல்லா, மதுகான், மாநகர சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் அப்பகுதி சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் கோவில் நிர்வாக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement