• Jun 08 2025

எதிர்வரும் வாரத்திற்குள் தீர்வு வழங்காவிடின் மீண்டும் பணிப்புறக்கணிப்பு ; மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் சங்கம்...!

shanuja / Jun 8th 2025, 10:35 am
image

எதிர்வரும் வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்போம் என்று மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள்  சங்கம் தீர்மானித்துள்ளது. 

 

பதவி உயர்வு தாமதம் மற்றும் இணை சுகாதார பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட 5 பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரி, கடந்த வியாழக்கிழமை முதல் நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் தொழிற்சங்க ஒன்றியம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தது. 


பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், ஜனாதிபதி பொதுமக்கள் ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். 

 

அதனைத் தொடர்ந்து, குறித்த தொழிற்சங்கங்களின் நிர்வாக சங்கம் நேற்று முன்தினம் இரவு கூடியிருந்த நிலையில், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நேற்று காலை முதல் தற்காலிகமாகக் கைவிடுவதற்கு 4 தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன. 

 

எனினும், ரவி குமுதேஷ் தலைமையிலான மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பை தொடர்வதற்குத் தீர்மானித்திருந்தது. இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையின் காரணமாகப் பல நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். 

 

இந்த நிலையில் நேற்றிரவு கூடிய அந்த சங்கத்தின் நிறைவேற்று குழு, இன்று காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பை கைவிடுவதற்குத் தீர்மானித்ததாக மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். 

 

இதேவேளை, எதிர்வரும் வாரத்திற்குள் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால், நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் தொழிற்சங்க ஒன்றியம் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் வாரத்திற்குள் தீர்வு வழங்காவிடின் மீண்டும் பணிப்புறக்கணிப்பு ; மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் சங்கம். எதிர்வரும் வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்போம் என்று மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள்  சங்கம் தீர்மானித்துள்ளது.  பதவி உயர்வு தாமதம் மற்றும் இணை சுகாதார பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட 5 பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரி, கடந்த வியாழக்கிழமை முதல் நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் தொழிற்சங்க ஒன்றியம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தது. பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், ஜனாதிபதி பொதுமக்கள் ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.  அதனைத் தொடர்ந்து, குறித்த தொழிற்சங்கங்களின் நிர்வாக சங்கம் நேற்று முன்தினம் இரவு கூடியிருந்த நிலையில், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நேற்று காலை முதல் தற்காலிகமாகக் கைவிடுவதற்கு 4 தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன.  எனினும், ரவி குமுதேஷ் தலைமையிலான மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பை தொடர்வதற்குத் தீர்மானித்திருந்தது. இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையின் காரணமாகப் பல நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.  இந்த நிலையில் நேற்றிரவு கூடிய அந்த சங்கத்தின் நிறைவேற்று குழு, இன்று காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பை கைவிடுவதற்குத் தீர்மானித்ததாக மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.  இதேவேளை, எதிர்வரும் வாரத்திற்குள் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால், நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் தொழிற்சங்க ஒன்றியம் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement