வெள்ளவத்தைப் பகுதியில் நிறுத்தப்பட்ட ஓட்டோவுக்குள் மயங்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை நீதவானால் இன்று விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது என்று வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (7) ஆம் திகதி வேலவனாராம வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஓட்டோவுக்குள் மயக்க நிலையில் குறித்த நபர் இருந்துள்ளார்.
அதனை அவதானித்த பிரதேச மக்கள் வெள்ளவத்தை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து ஓட்டோவிலிருந்த நபர் மீட்கப்பட்டு களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.
உயிரிழந்தவர் வெள்ளவத்தை - வேலவனாராம பகுதியைச் சேர்ந்த 41 வயதான நபர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனையடுத்து இன்று ( 8 ) நீதவான் விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நிறுத்தப்பட்ட ஓட்டோவுக்குள் உயிரிழந்த நபர் ; நீதவான் விசாரணை இன்று. வெள்ளவத்தைப் பகுதியில் நிறுத்தப்பட்ட ஓட்டோவுக்குள் மயங்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை நீதவானால் இன்று விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது என்று வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (7) ஆம் திகதி வேலவனாராம வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஓட்டோவுக்குள் மயக்க நிலையில் குறித்த நபர் இருந்துள்ளார். அதனை அவதானித்த பிரதேச மக்கள் வெள்ளவத்தை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து ஓட்டோவிலிருந்த நபர் மீட்கப்பட்டு களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. உயிரிழந்தவர் வெள்ளவத்தை - வேலவனாராம பகுதியைச் சேர்ந்த 41 வயதான நபர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனையடுத்து இன்று ( 8 ) நீதவான் விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.