அம்பாறையில் தனது கோழிக் கடையை சுத்தம் செய்யும்போது மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி வீதியில் நேற்று குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின்சாரம் தாக்கிய பின் அயலவர்களால் உடனடியாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மதியம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மலையடிக்கிரமம், சம்மந்துறை முகவரியைச் சேர்ந்த 42 வயதுடைய கலந்தர் லெப்பை ரமீஸ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மேலும் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் கட்டளையின் பிரகாரம், மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர், மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் பிரிந்த உயிர் - கோழிக் கடையை சுத்தம் செய்யும்போது நடந்த விபரீதம் அம்பாறையில் தனது கோழிக் கடையை சுத்தம் செய்யும்போது மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி வீதியில் நேற்று குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மின்சாரம் தாக்கிய பின் அயலவர்களால் உடனடியாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மதியம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மலையடிக்கிரமம், சம்மந்துறை முகவரியைச் சேர்ந்த 42 வயதுடைய கலந்தர் லெப்பை ரமீஸ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.மேலும் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் கட்டளையின் பிரகாரம், மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர், மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.