• Aug 09 2026

10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்தது லங்கா சதொச

Chithra / Aug 8th 2026, 12:28 pm
image


நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்த விலைத் திருத்தம் இன்று (8) முதல் அமுலுக்கு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதன்படி, ஒரு கிலோகிராம் பூண்டின் விலை 699 ரூபாவிலிருந்து 649 ரூபாவாகவும், பெரிய வெங்காயத்தின் விலை 259 ரூபாவிலிருந்து 224 ரூபாவாகவும், உருளைக்கிழங்கின் விலை 259 ரூபாவிலிருந்து 239 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.


மேலும், பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி, பாசிப்பயறு, சிவப்பு பச்சை அரிசி, உள்ளூர் வெள்ளை நாடு அரிசி, கடலை மற்றும் உளுந்து உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.


வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.


இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை நுகர்வோர் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்தது லங்கா சதொச நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த விலைத் திருத்தம் இன்று (8) முதல் அமுலுக்கு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி, ஒரு கிலோகிராம் பூண்டின் விலை 699 ரூபாவிலிருந்து 649 ரூபாவாகவும், பெரிய வெங்காயத்தின் விலை 259 ரூபாவிலிருந்து 224 ரூபாவாகவும், உருளைக்கிழங்கின் விலை 259 ரூபாவிலிருந்து 239 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.மேலும், பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி, பாசிப்பயறு, சிவப்பு பச்சை அரிசி, உள்ளூர் வெள்ளை நாடு அரிசி, கடலை மற்றும் உளுந்து உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை நுகர்வோர் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement