• Jun 19 2025

லஞ்ச ஒழிப்பு ஆணையகத்தில் முன்னிலையானார் கெஹெலிய!

shanuja / Jun 18th 2025, 12:36 pm
image



முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல , லஞ்ச ஒழிப்பு ஆணையகத்தின் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்  ஆணையகத்தில் இன்று (18) முன்னிலையாகியுள்ளார். 


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல,  ஊழல் குற்றச்சாட்டின் கீழ் மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 


தற்போது பிணையில் உள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, லஞ்ச ஒழிப்பு ஆணையகத்தில் வாக்குமூலம்  வழங்குவதற்காக இன்று முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இதற்கிடையே  முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஊழல் குற்றச்சாட்டுக்களையடுத்து அவரது மகள், மகள் மற்றும் வீட்டுப்பணிப்பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லஞ்ச ஒழிப்பு ஆணையகத்தில் முன்னிலையானார் கெஹெலிய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல , லஞ்ச ஒழிப்பு ஆணையகத்தின் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்  ஆணையகத்தில் இன்று (18) முன்னிலையாகியுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல,  ஊழல் குற்றச்சாட்டின் கீழ் மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது பிணையில் உள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, லஞ்ச ஒழிப்பு ஆணையகத்தில் வாக்குமூலம்  வழங்குவதற்காக இன்று முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையே  முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஊழல் குற்றச்சாட்டுக்களையடுத்து அவரது மகள், மகள் மற்றும் வீட்டுப்பணிப்பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement