• Apr 17 2026

யாழில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

Chithra / Mar 8th 2026, 12:36 pm
image


சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் வீரசிங்கம்  மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 


ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான மேம்பாட்டு  அமைப்பின் பணிப்பாளர் வாசுகி சுதாகரன் தலைமையில்  இந் நிகழ்வுகள் இடம்பெற்றது.


நிகழ்வில் மங்கல விளக்கினை பிரபல ஈழத்து பெண் பாடகி நடிகை பார்வதி அம்மா ஏற்றிவைத்தார்.


நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சிறுவர் நன்னடத்தை அதிகார சபையின் பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ் கலந்து கொண்டார்.


சிறுவர், பெண்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதையும் அவர்களின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பில் குரல் கொடுக்கும் கலை நிகழ்ச்சிகளும் நாடகங்களும் அரங்கேற்றப்பட்டது.


யாழில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் வீரசிங்கம்  மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான மேம்பாட்டு  அமைப்பின் பணிப்பாளர் வாசுகி சுதாகரன் தலைமையில்  இந் நிகழ்வுகள் இடம்பெற்றது.நிகழ்வில் மங்கல விளக்கினை பிரபல ஈழத்து பெண் பாடகி நடிகை பார்வதி அம்மா ஏற்றிவைத்தார்.நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சிறுவர் நன்னடத்தை அதிகார சபையின் பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ் கலந்து கொண்டார்.சிறுவர், பெண்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதையும் அவர்களின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பில் குரல் கொடுக்கும் கலை நிகழ்ச்சிகளும் நாடகங்களும் அரங்கேற்றப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement