கிண்ணியாவில் தற்போது நிலவி வரும் கடும் கடல் கொந்தளிப்பு காரணமாக, மீனவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகக் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றது.
இதன் காரணமாகக் கடல் நீர் ஊடுருவும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி உபகரணங்களைப் பாதுகாப்பதில் மீனவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தமது வாழ்வாதாரமான படகுகள் மற்றும் வலைகளைச் சேதமடையாமல் பாதுகாப்பதற்காக, மீனவர்கள் ஒன்றிணைந்து அவற்றை கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். பல இடங்களில் படகுகள் வீதியோரங்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை, மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே கடந்த ஒரு மாதகாலத்துக்கும் மேலாக நிலவி வந்த கனமழை மற்றும் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு காரணமாக மீனவர்கள் எவரும் கடலுக்குச் செல்லவில்லை. ஆற்று நீர் கடலில் கலப்பதால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தொடர் காற்றினால் மீன்பிடித் தொழில் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
தொடர்ச்சியான இயற்கைச் சீற்றங்களினால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிண்ணியாவில் தீவிரமான கொந்தளிக்கும் கடல்; அச்சத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள் கிண்ணியாவில் தற்போது நிலவி வரும் கடும் கடல் கொந்தளிப்பு காரணமாக, மீனவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகக் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றது.இதன் காரணமாகக் கடல் நீர் ஊடுருவும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி உபகரணங்களைப் பாதுகாப்பதில் மீனவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.தமது வாழ்வாதாரமான படகுகள் மற்றும் வலைகளைச் சேதமடையாமல் பாதுகாப்பதற்காக, மீனவர்கள் ஒன்றிணைந்து அவற்றை கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். பல இடங்களில் படகுகள் வீதியோரங்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.இதேவேளை, மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதுஏற்கனவே கடந்த ஒரு மாதகாலத்துக்கும் மேலாக நிலவி வந்த கனமழை மற்றும் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு காரணமாக மீனவர்கள் எவரும் கடலுக்குச் செல்லவில்லை. ஆற்று நீர் கடலில் கலப்பதால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தொடர் காற்றினால் மீன்பிடித் தொழில் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.தொடர்ச்சியான இயற்கைச் சீற்றங்களினால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.