யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் இணைந்த முகாமைத்துவக்குழுக் கூட்டம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ; ஜா தலைமையில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நேற்று (28) நடைபெற்றது.
23.08.2023 திகதி இணைந்த முகாமைத்துவக் கூட்டம் இறுதியாக நடைபெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தை கூட்டுவதற்கான கோரிக்கையை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் முன்வைத்திருந்தார்.
அதற்கு அமைவாக நேற்று இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியத் தூதுவர் தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயன் , யாழ். மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.டிலானி, கலாசார ஊக்குவிப்பு பணிப்பாளர் பிரசாட் ரணசிங்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்டதுடன், புத்தசாசன, சமய விவகார கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹிந்தும சுனில் செனவி இணையவழியில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தலைமையில் யாழில் முக்கிய கூட்டம். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் இணைந்த முகாமைத்துவக்குழுக் கூட்டம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ; ஜா தலைமையில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நேற்று (28) நடைபெற்றது. 23.08.2023 திகதி இணைந்த முகாமைத்துவக் கூட்டம் இறுதியாக நடைபெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தை கூட்டுவதற்கான கோரிக்கையை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் முன்வைத்திருந்தார். அதற்கு அமைவாக நேற்று இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தியத் தூதுவர் தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயன் , யாழ். மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.டிலானி, கலாசார ஊக்குவிப்பு பணிப்பாளர் பிரசாட் ரணசிங்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்டதுடன், புத்தசாசன, சமய விவகார கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹிந்தும சுனில் செனவி இணையவழியில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.