• Jun 03 2025

சட்டவிரோத கனிய மணல் அகழ்வு; அமைதி காக்கிறாரா மன்னார் ஆயர்?

shanuja / Jun 1st 2025, 2:14 pm
image

மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது மன்னார் மாவட்ட ஆயர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அமைதி காத்து வருகின்றார் என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 


கடந்த சில வருடங்களாக சட்டவிரோதமாக இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வுக்கு பல எதிர்ப்பு நடவடிக்கைகள், போராட்டங்கள் என பொது அமைப்புகள், மீனவ சங்கங்கள், அருட்தந்தையர்கள், மத தலைவர்கள் என பலரும் இணைந்து மேற்கொண்டிருந்தனர். 


இவ்வாறான பின்னனியில் அண்மைக்காலமாக குறித்த கணிய மணல் அகழ்வுக்கு எதிராக போராடிய பலர் தற்போது கனியமணல் அகழ்வு தொடர்பான பிரச்சினைகளில் அமைதி காத்து வருகின்றனர்.


குறிப்பாக கனிய மணல் அகழ்வுக்கு எதிரக முன்னின்று போராட்டங்களை நடாத்திய பல பிரதிநிதிகள்,அருட்தந்தையர்கள் தற்போது கனிய மணல் அகழ்வு தொடர்பான விடயங்களில் கருத்து தெரிவிப்பதை கூட தவிர்த்து வருகின்றனர்.



இதற்கிடையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சிலரை விலை கொடுத்து வாங்கியுள்ள மணல் அகழ்வு நிறுவனம் அவர்களூடாக பல அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்கி கணிய மணல் அகழ்வுக்கான பணிகளை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை நடத்தி வருகின்றது.


மேலும் கனியமணல் அகழ்வு,காற்றாலை செயற்திட்டத்துக்கான வேலை திட்டங்கள் அனைத்தும் கடந்த காலத்தை விட வேகமான நடைபெற்று வருகின்றது. 

இதை அறியாத மக்கள் பலர் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தை நம்பி அமைதியாகவுள்ளனர்.

சட்டவிரோத கனிய மணல் அகழ்வு; அமைதி காக்கிறாரா மன்னார் ஆயர் மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது மன்னார் மாவட்ட ஆயர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அமைதி காத்து வருகின்றார் என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த சில வருடங்களாக சட்டவிரோதமாக இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வுக்கு பல எதிர்ப்பு நடவடிக்கைகள், போராட்டங்கள் என பொது அமைப்புகள், மீனவ சங்கங்கள், அருட்தந்தையர்கள், மத தலைவர்கள் என பலரும் இணைந்து மேற்கொண்டிருந்தனர். இவ்வாறான பின்னனியில் அண்மைக்காலமாக குறித்த கணிய மணல் அகழ்வுக்கு எதிராக போராடிய பலர் தற்போது கனியமணல் அகழ்வு தொடர்பான பிரச்சினைகளில் அமைதி காத்து வருகின்றனர்.குறிப்பாக கனிய மணல் அகழ்வுக்கு எதிரக முன்னின்று போராட்டங்களை நடாத்திய பல பிரதிநிதிகள்,அருட்தந்தையர்கள் தற்போது கனிய மணல் அகழ்வு தொடர்பான விடயங்களில் கருத்து தெரிவிப்பதை கூட தவிர்த்து வருகின்றனர்.இதற்கிடையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சிலரை விலை கொடுத்து வாங்கியுள்ள மணல் அகழ்வு நிறுவனம் அவர்களூடாக பல அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்கி கணிய மணல் அகழ்வுக்கான பணிகளை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை நடத்தி வருகின்றது.மேலும் கனியமணல் அகழ்வு,காற்றாலை செயற்திட்டத்துக்கான வேலை திட்டங்கள் அனைத்தும் கடந்த காலத்தை விட வேகமான நடைபெற்று வருகின்றது. இதை அறியாத மக்கள் பலர் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தை நம்பி அமைதியாகவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement