• Jun 18 2025

நாட்டின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

shanuja / Jun 18th 2025, 8:37 am
image

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..! 



தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இடியுடன்  கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

 

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட  வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வுகூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, 


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் . அத்துடன் வடமேல் மாகாணத்திலும் பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.  


ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


மேலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 


இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்  பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை. தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இடியுடன்  கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட  வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வுகூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் . அத்துடன் வடமேல் மாகாணத்திலும் பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.  ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்  பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement