• Jun 13 2025

பொகவந்தலாவையில் கன மழை; பல வீதிகள் நீரில் மூழ்கின

Chithra / Jun 11th 2025, 2:25 pm
image


பொகவந்தலாவ பகுதியில் கனமழை பெய்து வரும்வேளை, கெசல்கமுவ ஓயாவில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இரவு முதல் பொகவந்தலாவ பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, முக்கியமாக காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கிளை ஆறான கெசல்கமுவ ஓயாவில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் இதனை அண்டிய பல தோட்டங்களின் பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக பொகவந்தலாவ நகரத்திலிருந்து தெரேசியா மற்றும் கிலானி தோட்டங்களுக்குச் செல்லும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன, 

இதனால் அந்த வீதிகளில் பயணிக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.


பொகவந்தலாவையில் கன மழை; பல வீதிகள் நீரில் மூழ்கின பொகவந்தலாவ பகுதியில் கனமழை பெய்து வரும்வேளை, கெசல்கமுவ ஓயாவில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.இரவு முதல் பொகவந்தலாவ பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, முக்கியமாக காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கிளை ஆறான கெசல்கமுவ ஓயாவில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.இதனால் இதனை அண்டிய பல தோட்டங்களின் பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.குறிப்பாக பொகவந்தலாவ நகரத்திலிருந்து தெரேசியா மற்றும் கிலானி தோட்டங்களுக்குச் செல்லும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன, இதனால் அந்த வீதிகளில் பயணிக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement