கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றிருந்த ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி மேயர் பதவியைப் பெற்று அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது.
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் டி.ஏ.காமினி அதிகளவான வாக்குகளைப் பெற்று ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் புத்தல பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் ராஜிக சதுரங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேச சபைக்கான தவிசாளராக தெரிவுசெய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் ராஜிக சதுரங்க பெரும்பான்மை வாக்குகளை பெற்று புத்தல பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாநகர சபை, புத்தல பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றிருந்த ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி மேயர் பதவியைப் பெற்று அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது.இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் டி.ஏ.காமினி அதிகளவான வாக்குகளைப் பெற்று ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் புத்தல பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் ராஜிக சதுரங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேச சபைக்கான தவிசாளராக தெரிவுசெய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் ராஜிக சதுரங்க பெரும்பான்மை வாக்குகளை பெற்று புத்தல பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.