தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பான விசாரணையில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப்பையில் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.
துப்பாக்கி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் துப்பாக்கியுடன் தொடர்புடையவர் என்று முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடந்த மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து மேலதிக விசாரணைகளுக்காக அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தங்கமுலாம் துப்பாக்கி - துமிந்த திசாநாயக்க நீதிமன்றில் தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பான விசாரணையில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப்பையில் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. துப்பாக்கி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் துப்பாக்கியுடன் தொடர்புடையவர் என்று முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடந்த மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து மேலதிக விசாரணைகளுக்காக அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.