மூதூரில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை வழக்கு தொடர்பில் சிறுமி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மூதூரில் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (30) திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான 15 வயது சிறுமி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தனது அம்மம்மா ,அம்மம்மாவின் சகோதரி ஆகிய இருவரை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த சிறுமி இன்று திருகோணமலை மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து சிறுமியின் கல்வி கற்கும் உரிமை மற்றும் அவர் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தமை , அரசியல் அமைப்பில் சிறுவர்களின் சட்ட உரிமை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு அவரை பிணையில் விடுதலை செய்ய திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.
நீதிமன்றம் சிறுமிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ளது. 25,000 ரூபா மற்றும் 10 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
மேலும், சிறுமியின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமை சிறுமியைப் பற்றிய முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மூதூர் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தருக்கு நீதிவான் அறிவுறுத்துதல் வழங்கியுள்ளார்.
சிறுமி சார்பாக சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் எதிர்காலத்தையும், கல்வி கற்கும் உரிமையையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகப் இத்தீர்ப்பு பார்க்கப்படுகிறது.
இரட்டை கொலை வழக்கில் சிறுமி பிணையில் விடுதலை; திருகோணமலை மேல் நீதிமன்றம் கல்வி உரிமை கருதி தீர்ப்பு மூதூரில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை வழக்கு தொடர்பில் சிறுமி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மூதூரில் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (30) திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான 15 வயது சிறுமி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சிறுமி தனது அம்மம்மா ,அம்மம்மாவின் சகோதரி ஆகிய இருவரை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் குறித்த சிறுமி இன்று திருகோணமலை மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து சிறுமியின் கல்வி கற்கும் உரிமை மற்றும் அவர் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தமை , அரசியல் அமைப்பில் சிறுவர்களின் சட்ட உரிமை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு அவரை பிணையில் விடுதலை செய்ய திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.நீதிமன்றம் சிறுமிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ளது. 25,000 ரூபா மற்றும் 10 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.மேலும், சிறுமியின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமை சிறுமியைப் பற்றிய முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மூதூர் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தருக்கு நீதிவான் அறிவுறுத்துதல் வழங்கியுள்ளார்.சிறுமி சார்பாக சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் எதிர்காலத்தையும், கல்வி கற்கும் உரிமையையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகப் இத்தீர்ப்பு பார்க்கப்படுகிறது.