• Nov 21 2025

தாய் - மகன் மீது அசிட் தாக்குதல் நடத்திய கும்பல்; பறிபோன உயிர்

Chithra / Nov 21st 2025, 10:32 am
image


இரத்தினபுரி - அயகம பகுதியில் பெண் மற்றும் அவரது 16 வயது மகன் மீது அசிட் தாக்குதல் நடத்தப்பட்டதில் தாய் உயிரிழந்துள்ளார். 

நேற்று இரவு இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் அசிட் தாக்குதலில் பலத்த காயமடைந்த தாயையும் மகனையும் அயகம மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

எனினும் சிகிச்சை பலனின்றி, கொழம்பேவ, கவரகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான தாய் உயிரிழந்தார். 

அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரத்தினபுரி மருத்துவமனையின் பிணவறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாய் - மகன் மீது அசிட் தாக்குதல் நடத்திய கும்பல்; பறிபோன உயிர் இரத்தினபுரி - அயகம பகுதியில் பெண் மற்றும் அவரது 16 வயது மகன் மீது அசிட் தாக்குதல் நடத்தப்பட்டதில் தாய் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் அசிட் தாக்குதலில் பலத்த காயமடைந்த தாயையும் மகனையும் அயகம மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி, கொழம்பேவ, கவரகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான தாய் உயிரிழந்தார். அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இரத்தினபுரி மருத்துவமனையின் பிணவறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement