மேல் மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள நிறைவுகாண் வைத்திய சேவை தொழில் வல்லுநர்கள் இன்று முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் இந்த வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளதாக நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் நிறைவுகாண் வைத்திய சேவை தொழில் வல்லுநர்கள் நேற்று (20) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளிடமிருந்து தங்கள் கோரிக்கைகளுக்கு சரியான தீர்வுகள் கிடைக்காததால், மேல் மாகாண சபையின் கீழ் உள்ள 31 வைத்தியசாலைகளில் இன்று இந்த வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று சானக தர்மவிக்ரம குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தபால் தொழிற்சங்கங்களால் தொடங்கப்பட்ட தொடர்ச்சியான வேலைநிறுத்தம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
தபால் மூலம் சேவைகளைப் பெற வந்த மக்களும் வேலைநிறுத்தம் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
எனினும், தபால் நிர்வாகம் நேற்று (20) தங்கள் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாட வாய்ப்பு வழங்காததால், இன்றும் வேலைநிறுத்தத்தை தொடரப்போவதாக தபால் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
நிறைவுகாண் வைத்திய சேவை தொழில் வல்லுநர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் மேல் மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள நிறைவுகாண் வைத்திய சேவை தொழில் வல்லுநர்கள் இன்று முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் இந்த வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளதாக நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார். மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் நிறைவுகாண் வைத்திய சேவை தொழில் வல்லுநர்கள் நேற்று (20) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளிடமிருந்து தங்கள் கோரிக்கைகளுக்கு சரியான தீர்வுகள் கிடைக்காததால், மேல் மாகாண சபையின் கீழ் உள்ள 31 வைத்தியசாலைகளில் இன்று இந்த வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று சானக தர்மவிக்ரம குறிப்பிட்டார். இதற்கிடையில், தபால் தொழிற்சங்கங்களால் தொடங்கப்பட்ட தொடர்ச்சியான வேலைநிறுத்தம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது. தபால் மூலம் சேவைகளைப் பெற வந்த மக்களும் வேலைநிறுத்தம் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். எனினும், தபால் நிர்வாகம் நேற்று (20) தங்கள் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாட வாய்ப்பு வழங்காததால், இன்றும் வேலைநிறுத்தத்தை தொடரப்போவதாக தபால் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.