• Apr 19 2026

மற்றவர்களின் QR குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருள் மோசடி: பலருக்கு எதிராக நடவடிக்கை

Chithra / Mar 26th 2026, 7:37 pm
image

மற்றவர்களுக்குச் சொந்தமான கியூ.ஆர். குறியீடுகளை முறைகேடாகப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்பாக 1000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைச்சின் செயலாளர் வர்ண ஸ்ரீ தனபால தெரிவிக்கையில், 

இந்தப் முறைப்பாடுகள் தொடர்பாக பொலிஸாருடன் இணைந்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கிடைத்துள்ள முறைப்பாடுகளில் 150-க்கும் அதிகமானவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

இந்த மோசடிகளுடன் தொடர்புடைய சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்புச் சோதனைக் கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகநபர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் அறியாமை காரணமாக அல்லது தவறான புரிதலால் மற்றவர்களின் கியூ.ஆர். குறியீடுகளைப் பயன்படுத்திய சம்பவங்களும் இந்தப் முறைப்பாடுகளில் உள்ளடங்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

மற்றவர்களின் QR குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருள் மோசடி: பலருக்கு எதிராக நடவடிக்கை மற்றவர்களுக்குச் சொந்தமான கியூ.ஆர். குறியீடுகளை முறைகேடாகப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்பாக 1000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த அமைச்சின் செயலாளர் வர்ண ஸ்ரீ தனபால தெரிவிக்கையில், இந்தப் முறைப்பாடுகள் தொடர்பாக பொலிஸாருடன் இணைந்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.கிடைத்துள்ள முறைப்பாடுகளில் 150-க்கும் அதிகமானவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த மோசடிகளுடன் தொடர்புடைய சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்புச் சோதனைக் கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகநபர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் அறியாமை காரணமாக அல்லது தவறான புரிதலால் மற்றவர்களின் கியூ.ஆர். குறியீடுகளைப் பயன்படுத்திய சம்பவங்களும் இந்தப் முறைப்பாடுகளில் உள்ளடங்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement