2026 ஜூலை 5 ஆம் திகதி, பதுளை மாவட்டத்தின் கன்னவரெல்லா தோட்டப் பகுதியில் அமைக்கப்படவுள்ள 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கையின் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி. சமந்த வித்யாரத்ன மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் ஹர்விந்தர் சிங் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.
இந்த வீடுகள், இலங்கையின் ஆறு மாகாணங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்காக 10,000 வீடுகள் நிர்மாணிக்கும் இந்திய வீடமைப்பு திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் அமைக்கப்படுகின்றன.
இந்திய அரசின் மானிய உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்திய வீடமைப்பு திட்டம், இலங்கையில் சுமார் 60,000 வீடுகளை நிர்மாணிக்கும் முக்கிய அபிவிருத்தித் திட்டமாகும். இதற்காக இந்திய அரசு ரூ.18 பில்லியனுக்கும் அதிகமான (இந்திய ரூபா) நிதி உதவியை வழங்கியுள்ளது.
முதல் இரண்டு கட்டங்களின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 46,000 வீடுகள் கட்டப்பட்டு அல்லது புதுப்பிக்கப்பட்டன. மூன்றாம் கட்டத்தில் தோட்டப் பகுதிகளில் மேலும் 4,000 வீடுகள் அமைக்கப்பட்டன.
இந்திய வம்சாவளி தமிழர் சமூகமும் தோட்டப் பகுதிகளும் இலங்கையுடனான இந்தியாவின் அபிவிருத்தி ஒத்துழைப்பில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. வீடமைப்பைத் தாண்டி, டிக்கோயாவில் பல்துறை சிறப்பு வைத்தியசாலை நிர்மாணம், நவீன வகுப்பறைகள் அமைத்தல், ஒன்பது தோட்டப் பாடசாலைகளை மேம்படுத்தல் மற்றும் சீதா எலியா ஆலய அபிவிருத்திக்கு இந்தியா வழங்கிய ஆதரவு போன்ற திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்ததன் 200 ஆண்டுகளை முன்னிட்டு, 2023 ஜூலை மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரூ. 750 மில்லியன் (இந்திய ரூபா) மதிப்பிலான பல்துறை அபிவிருத்தி உதவித் தொகுப்பை அறிவித்திருந்தார்.
இந்த நிகழ்வில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கித்னன் செல்வராஜ், தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் உயரதிகாரிகள், Plantation Human Development Trust அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் கன்னவரெல்லா தோட்ட மக்களும் கலந்து கொண்டனர்.
பதுளை மாவட்டத்தில் 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடுகை 2026 ஜூலை 5 ஆம் திகதி, பதுளை மாவட்டத்தின் கன்னவரெல்லா தோட்டப் பகுதியில் அமைக்கப்படவுள்ள 57 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் இலங்கையின் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி. சமந்த வித்யாரத்ன மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் ஹர்விந்தர் சிங் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.இந்த வீடுகள், இலங்கையின் ஆறு மாகாணங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்காக 10,000 வீடுகள் நிர்மாணிக்கும் இந்திய வீடமைப்பு திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் அமைக்கப்படுகின்றன.இந்திய அரசின் மானிய உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்திய வீடமைப்பு திட்டம், இலங்கையில் சுமார் 60,000 வீடுகளை நிர்மாணிக்கும் முக்கிய அபிவிருத்தித் திட்டமாகும். இதற்காக இந்திய அரசு ரூ.18 பில்லியனுக்கும் அதிகமான (இந்திய ரூபா) நிதி உதவியை வழங்கியுள்ளது. முதல் இரண்டு கட்டங்களின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 46,000 வீடுகள் கட்டப்பட்டு அல்லது புதுப்பிக்கப்பட்டன. மூன்றாம் கட்டத்தில் தோட்டப் பகுதிகளில் மேலும் 4,000 வீடுகள் அமைக்கப்பட்டன.இந்திய வம்சாவளி தமிழர் சமூகமும் தோட்டப் பகுதிகளும் இலங்கையுடனான இந்தியாவின் அபிவிருத்தி ஒத்துழைப்பில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. வீடமைப்பைத் தாண்டி, டிக்கோயாவில் பல்துறை சிறப்பு வைத்தியசாலை நிர்மாணம், நவீன வகுப்பறைகள் அமைத்தல், ஒன்பது தோட்டப் பாடசாலைகளை மேம்படுத்தல் மற்றும் சீதா எலியா ஆலய அபிவிருத்திக்கு இந்தியா வழங்கிய ஆதரவு போன்ற திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.மேலும், இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்ததன் 200 ஆண்டுகளை முன்னிட்டு, 2023 ஜூலை மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரூ. 750 மில்லியன் (இந்திய ரூபா) மதிப்பிலான பல்துறை அபிவிருத்தி உதவித் தொகுப்பை அறிவித்திருந்தார்.இந்த நிகழ்வில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கித்னன் செல்வராஜ், தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் உயரதிகாரிகள், Plantation Human Development Trust அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் கன்னவரெல்லா தோட்ட மக்களும் கலந்து கொண்டனர்.