• Jun 08 2025

மட்டக்களப்பில் வீட்டுத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான புதிய வீட்டுக்கான - அடிக்கல் நாட்டு நிகழ்வு.

Thansita / Jun 7th 2025, 4:05 pm
image

மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில் சனிக்கிழமை இன்று இடம்பெற்றது.

முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட ஆறு பயனாளிகளில் இதன்போது இருதயபுரம் கிழக்கிலும் திமிலதீவிலும் 2 பயனாளிகளுக்கா ன வீடுகளுக்குரிய அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது.


இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு வீட்டுக்கான அடி கல்லை நாட்டு வைத்தார்.

சிறப்பு அதிதியாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் டி.சுபாஸ்கரன் கலந்து கொண்டார்.

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு வீட்டிற்கு பத்து லட்சம் ரூபாய் அரசாங்கத்தினால் மானிய தொகையாக வழங்கப்பட உள்ளன.

இன்றைய நிகழ்வுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள் மண்முனை வடக்கு பிரதேச செயலக த்தின்உயர் அதிகாரிகள் பயனாளிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


மட்டக்களப்பில் வீட்டுத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான புதிய வீட்டுக்கான - அடிக்கல் நாட்டு நிகழ்வு. மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில் சனிக்கிழமை இன்று இடம்பெற்றது.முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட ஆறு பயனாளிகளில் இதன்போது இருதயபுரம் கிழக்கிலும் திமிலதீவிலும் 2 பயனாளிகளுக்கா ன வீடுகளுக்குரிய அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு வீட்டுக்கான அடி கல்லை நாட்டு வைத்தார்.சிறப்பு அதிதியாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் டி.சுபாஸ்கரன் கலந்து கொண்டார்.தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு வீட்டிற்கு பத்து லட்சம் ரூபாய் அரசாங்கத்தினால் மானிய தொகையாக வழங்கப்பட உள்ளன.இன்றைய நிகழ்வுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள் மண்முனை வடக்கு பிரதேச செயலக த்தின்உயர் அதிகாரிகள் பயனாளிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement