கொழும்பு - வெலிக்கடை பகுதியில் காதலனை தாக்கிய காதலி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
இவர்கள் இருவரும், டிக்டாக் செயலி ஊடாக சில நாட்களுக்கு முன்னர் நண்பர்களாகி பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
இதன்பின் குறித்த காதலன் காதலியிடம் தங்க மோதிரத்தை வாங்கி சென்ற நிலையில் அதை மீண்டும் கொடுப்பதற்கு மறுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த காதலி, இன்னும் சிலருடன் இணைந்து காதலனை தாக்கி, மோதிரத்தை மீளப் பெற்றுள்ளார்.
காதலன் மீது சந்தேக நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டதன் பின்னர், அவரிடமிருந்து 3000 ரூபாய் பணம், 150,000 ரூபாய் பெறுமதியான தொலைபேசி, தலைக்கவசம் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
அத்துடன்,அவரின் மோட்டார் சைக்கிளுக்கு சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காதலி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் காதலியின் நெருங்கிய நண்பி, அந்த நண்பியின் காதலனும் அடங்குவர்.
காதலனை ஆள் வைத்து அடித்த காதலி உட்பட ஐவர் கைது கொழும்பு - வெலிக்கடை பகுதியில் காதலனை தாக்கிய காதலி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்இவர்கள் இருவரும், டிக்டாக் செயலி ஊடாக சில நாட்களுக்கு முன்னர் நண்பர்களாகி பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதன்பின் குறித்த காதலன் காதலியிடம் தங்க மோதிரத்தை வாங்கி சென்ற நிலையில் அதை மீண்டும் கொடுப்பதற்கு மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த காதலி, இன்னும் சிலருடன் இணைந்து காதலனை தாக்கி, மோதிரத்தை மீளப் பெற்றுள்ளார். காதலன் மீது சந்தேக நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டதன் பின்னர், அவரிடமிருந்து 3000 ரூபாய் பணம், 150,000 ரூபாய் பெறுமதியான தொலைபேசி, தலைக்கவசம் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர். அத்துடன்,அவரின் மோட்டார் சைக்கிளுக்கு சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் காதலி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்களில் காதலியின் நெருங்கிய நண்பி, அந்த நண்பியின் காதலனும் அடங்குவர்.