எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் வருகையை முற்று முழுமையாக நிறுத்த முடியும் என நம்புகின்றோம். இதற்கு இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.- என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று
நேற்று(24) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது,
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் பங்கேற்புடன் கிளிநொச்சி மாவட்ட மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
மீன்பிடித் தொழிலை நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மேம்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் ஊடாக அதிக மீன்களை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குதல் தொடர்பிலே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மீன் பிடித்துறைக்கு முன்னுரிமை அளிக்கின்ற மாவட்டம் மன்னார் மாவட்டம் ஆகும். நூற்றுக்கு நாற்பது வீதம் மீன் பிடி தொழிலையே பிரதானமாகக் கொண்டுள்ளனர் என கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. கடற்றொழிலாளர்களை பகடைக்காய்களாக மாத்திரமே பயன்படுத்தினர். நிரந்தர ஓய்வூதியம் கூட பெற்றுக்கொடுக்கப்படவில்லை. சட்டவிரோத கடற்தொழிலை தடுத்தலோடு அதில் ஈடுபடும் மீனவர்களை தெளிவூட்ட வேண்டும்.
இந்திய மீனவர்களின் வருகையையும் இதன் ஊடாக தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் வருகையை முற்று முழுமையாக நிறுத்த முடியும் என நம்புகின்றோம். இதற்கு இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.- என்றார்.
இந்திய மீனவர்களின் வருகையை முழுமையாக நிறுத்த முடியும் - கடற்றொழில் அமைச்சர் நம்பிக்கை எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் வருகையை முற்று முழுமையாக நிறுத்த முடியும் என நம்புகின்றோம். இதற்கு இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.- என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று(24) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் பங்கேற்புடன் கிளிநொச்சி மாவட்ட மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.மீன்பிடித் தொழிலை நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மேம்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் ஊடாக அதிக மீன்களை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குதல் தொடர்பிலே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மீன் பிடித்துறைக்கு முன்னுரிமை அளிக்கின்ற மாவட்டம் மன்னார் மாவட்டம் ஆகும். நூற்றுக்கு நாற்பது வீதம் மீன் பிடி தொழிலையே பிரதானமாகக் கொண்டுள்ளனர் என கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.கடந்த காலத்தில் கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. கடற்றொழிலாளர்களை பகடைக்காய்களாக மாத்திரமே பயன்படுத்தினர். நிரந்தர ஓய்வூதியம் கூட பெற்றுக்கொடுக்கப்படவில்லை. சட்டவிரோத கடற்தொழிலை தடுத்தலோடு அதில் ஈடுபடும் மீனவர்களை தெளிவூட்ட வேண்டும். இந்திய மீனவர்களின் வருகையையும் இதன் ஊடாக தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் வருகையை முற்று முழுமையாக நிறுத்த முடியும் என நம்புகின்றோம். இதற்கு இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.- என்றார்.