கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ இன்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் உற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தல் உற்சவத்துடன் ஆரம்பமானது.
ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் புதன்கிழமை அன்னையின் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெற்றதுடன் வீதியுலாவும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் இன்று விசேட பூஜைகள் நடைபெற்று அம்பாள் கடல்குளிப்பு நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தீமிதிப்பு இடம்பெற்றது.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் குறித்த ஆலயத்திற்கு வருகைதந்து தீமிதிப்பில் கலந்துகொண்டனர். பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ பக்தர்களின் அரோகரா கோசங்களுடன் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
வரலாற்றுச்சிறப்பு மிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் புடைசூழ நடைபெற்று வருகின்றது.
கடந்த 22 ம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிய இப்பெருவிழாவில் நேற்றைய தினம் 26 கன்னிக்கால் வெட்டும் சடங்கு இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ மட்டக்களப்பு ஆலயத்தில் தீமிதிப்பு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ இன்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் உற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தல் உற்சவத்துடன் ஆரம்பமானது.ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் புதன்கிழமை அன்னையின் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெற்றதுடன் வீதியுலாவும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் இன்று விசேட பூஜைகள் நடைபெற்று அம்பாள் கடல்குளிப்பு நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தீமிதிப்பு இடம்பெற்றது.நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் குறித்த ஆலயத்திற்கு வருகைதந்து தீமிதிப்பில் கலந்துகொண்டனர். பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ பக்தர்களின் அரோகரா கோசங்களுடன் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. வரலாற்றுச்சிறப்பு மிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் புடைசூழ நடைபெற்று வருகின்றது. கடந்த 22 ம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிய இப்பெருவிழாவில் நேற்றைய தினம் 26 கன்னிக்கால் வெட்டும் சடங்கு இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.