வவுனியா மாநகரசபையின் முத்திரையின்றி பற்றுச்சீட்டில் கட்டணம் அறவிடப்பட்டதற்கு வவுனியா மாநகரசபையின் துணைமுதல்வரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாநகரசபைக்குட்பட்ட பொது மலசலகூடம் மற்றும் வாகன தரிப்பிடம் ஆகியவற்றின் கட்டண பற்றுச்சீட்டில் மாநகரசபையின் முத்திரையின்றி கட்டணம் அறவீடப்படுகின்றது என்று மாநகரசபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
பொதுமலசல கூடம் மற்றும் வாகன தரிப்பிடம் என்பன மாநகரசபையினால் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு விநியோகிக்கப்படும் பற்றுச்சீட்டுக்கு பின்பகுதியில் மாநகரசபையின் இறப்பர் முத்திரை பதிக்கப்பட்டு அவை மாநகரசபையின் வருமான கணக்கிற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.
இருப்பினும் மாநகரசபைக்குட்பட்ட சில பொதுமலசலகூடம் மற்றும் வாகன தரிப்பிடம் ஆகியவற்றில் விநியோகிக்கப்படும் பற்றுச்சீட்டின் பின்பகுதியில் எவ்வித இறப்பர் முத்திரையும் காணப்படவில்லை.
இது தொடர்பில் மாநகரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து மாநகர துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் , குறித்த பகுதிகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு நிலமைகளை நேரில் அவதானித்தார்.
அதன்போது மாநகரசபையின் இறப்பர் முத்திரை பதிக்காத பற்றுச்சீட்டுகளை விநியோகித்த ஒப்பந்தகாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்து உடனடியாக பற்றுச்சீட்டின் பின்பகுதியில் மாநகரசபையின் இறப்பர் முத்திரையினை பதிக்குமாறு தெரிவித்தார்.
அவ்வாறு செய்யாவிடின் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தினை இரத்து செய்து பிறிதொரு நபருக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
மாநகரசபையின் முத்திரையின்றி கட்டணம் அறவீடு - துணை முதல்வர் அதிரடி நடவடிக்கை வவுனியா மாநகரசபையின் முத்திரையின்றி பற்றுச்சீட்டில் கட்டணம் அறவிடப்பட்டதற்கு வவுனியா மாநகரசபையின் துணைமுதல்வரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகரசபைக்குட்பட்ட பொது மலசலகூடம் மற்றும் வாகன தரிப்பிடம் ஆகியவற்றின் கட்டண பற்றுச்சீட்டில் மாநகரசபையின் முத்திரையின்றி கட்டணம் அறவீடப்படுகின்றது என்று மாநகரசபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. பொதுமலசல கூடம் மற்றும் வாகன தரிப்பிடம் என்பன மாநகரசபையினால் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு விநியோகிக்கப்படும் பற்றுச்சீட்டுக்கு பின்பகுதியில் மாநகரசபையின் இறப்பர் முத்திரை பதிக்கப்பட்டு அவை மாநகரசபையின் வருமான கணக்கிற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.இருப்பினும் மாநகரசபைக்குட்பட்ட சில பொதுமலசலகூடம் மற்றும் வாகன தரிப்பிடம் ஆகியவற்றில் விநியோகிக்கப்படும் பற்றுச்சீட்டின் பின்பகுதியில் எவ்வித இறப்பர் முத்திரையும் காணப்படவில்லை. இது தொடர்பில் மாநகரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து மாநகர துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் , குறித்த பகுதிகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு நிலமைகளை நேரில் அவதானித்தார். அதன்போது மாநகரசபையின் இறப்பர் முத்திரை பதிக்காத பற்றுச்சீட்டுகளை விநியோகித்த ஒப்பந்தகாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்து உடனடியாக பற்றுச்சீட்டின் பின்பகுதியில் மாநகரசபையின் இறப்பர் முத்திரையினை பதிக்குமாறு தெரிவித்தார். அவ்வாறு செய்யாவிடின் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தினை இரத்து செய்து பிறிதொரு நபருக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தார்.