குஜராத் அகமதாபாதினில் நடந்த விமான விபத்து, மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளையும் பல குடும்பங்களின் கனவுகளையும் சிதைத்துள்ளது.
விமான விபத்தில் குடும்பத்துடன் உயிரிழந்தவர்களும், பல்வேறு கனவுகளுடன் பயணமாகி தமது குடும்பங்களை தவிக்கவிட்டு உயிரை விட்டவர்களும் என ஒருபுறம் இருக்க, எதிர்கால கடவுகளை சுமந்து வந்த மருத்துவக்கல்லூரி மாணவர்களின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமான விபத்தில் மருத்துவ கல்லூரி விடுதியிலிருந்து உயிரிழந்த மாணவர்களில் ஒருவர் ஜெய்பிரகாஷ். இவரின் தந்தையான தர்மராம் விவசாயம் மற்றும் கூலிவேலை செய்து மகனைப் மருத்துவம் படிக்க வைத்துள்ளார்.
கல்விக்காக கடன் வாங்கி மகனை படிப்பித்துள்ளார். ஜெய்பிரகாஷ் நீட் தேர்வில் 675 மதிப்பெண்கள் பெற்று தேர்வானார். 2023 இல், அவர் அகமதாபாத், பிஜே மருத்துவக் கல்லூரியில் அனுமதி பெற்றார்.
ஜெய்பிரகாஷின் இரண்டாம் ஆண்டுக்கான தேர்வுகள் எதிர்வரும் ஜூன் 16-ஆம் தேதி ஆரம்பிக்கவுள்ளது. இந்த நிலையில் அவர் விடுதியில் தங்கியுள்ளார்.
விபத்து இடம்பெறுவதற்கு முன், அவரது நண்பர் மாம்பழம் வாங்க சந்தைக்கு வருமாறு கேட்டுள்ளார், ஆனால் ஜெய்பிரகாஷ் மறுத்துவிட்டார். தனக்கு பசிப்பதாகவும், சாப்பாடு சாப்பிட மெஸ்ஸுக்குப் போவதாகச் சொல்லி சென்றுள்ளார்.
அங்கு சென்ற பின்னர் அந்த கொடூர விபத்தில் உயிரிழந்துள்ளார். இவரின் இழப்பிலிருந்து குடும்பத்தினர் மீளவில்லை. இவ்வாறு பலரின் கனவுகளை இந்ந விமான விபத்து சிதைத்துள்ளது.
கல்விக்காக கடன்பட்டு மகனை மருத்துவராக்க விரும்பிய தந்தை - ஒரு நொடியில் கனவை கலைத்த: ஏர் இந்தியா விமானம் குஜராத் அகமதாபாதினில் நடந்த விமான விபத்து, மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளையும் பல குடும்பங்களின் கனவுகளையும் சிதைத்துள்ளது. விமான விபத்தில் குடும்பத்துடன் உயிரிழந்தவர்களும், பல்வேறு கனவுகளுடன் பயணமாகி தமது குடும்பங்களை தவிக்கவிட்டு உயிரை விட்டவர்களும் என ஒருபுறம் இருக்க, எதிர்கால கடவுகளை சுமந்து வந்த மருத்துவக்கல்லூரி மாணவர்களின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான விபத்தில் மருத்துவ கல்லூரி விடுதியிலிருந்து உயிரிழந்த மாணவர்களில் ஒருவர் ஜெய்பிரகாஷ். இவரின் தந்தையான தர்மராம் விவசாயம் மற்றும் கூலிவேலை செய்து மகனைப் மருத்துவம் படிக்க வைத்துள்ளார். கல்விக்காக கடன் வாங்கி மகனை படிப்பித்துள்ளார். ஜெய்பிரகாஷ் நீட் தேர்வில் 675 மதிப்பெண்கள் பெற்று தேர்வானார். 2023 இல், அவர் அகமதாபாத், பிஜே மருத்துவக் கல்லூரியில் அனுமதி பெற்றார். ஜெய்பிரகாஷின் இரண்டாம் ஆண்டுக்கான தேர்வுகள் எதிர்வரும் ஜூன் 16-ஆம் தேதி ஆரம்பிக்கவுள்ளது. இந்த நிலையில் அவர் விடுதியில் தங்கியுள்ளார். விபத்து இடம்பெறுவதற்கு முன், அவரது நண்பர் மாம்பழம் வாங்க சந்தைக்கு வருமாறு கேட்டுள்ளார், ஆனால் ஜெய்பிரகாஷ் மறுத்துவிட்டார். தனக்கு பசிப்பதாகவும், சாப்பாடு சாப்பிட மெஸ்ஸுக்குப் போவதாகச் சொல்லி சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னர் அந்த கொடூர விபத்தில் உயிரிழந்துள்ளார். இவரின் இழப்பிலிருந்து குடும்பத்தினர் மீளவில்லை. இவ்வாறு பலரின் கனவுகளை இந்ந விமான விபத்து சிதைத்துள்ளது.