• Jun 13 2025

தந்தை, மகன் மீது வாள்வெட்டு தாக்குதல்; இளைஞர் பலி! தப்பியோடிய சந்தேக நபர்கள்

Chithra / Jun 12th 2025, 7:57 am
image


களுத்துறை - மத்துகம, அம்பருல்லகஹவத்த பகுதியில் தந்தை மற்றும் மகன் மீது மற்றொரு குழுவினர் வாளால் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதை அடுத்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 

நேற்று (11) இரவு இந்த தாக்குதல் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த தந்தை மற்றும் மகன் களுத்துறையில் உள்ள நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மகன் உயிரிழந்துள்ளார்.

யடிதோல, நாவுத்துடுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். 

அதே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவரே காயமடைந்தவர் ஆவார்.  

குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்ய மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தை, மகன் மீது வாள்வெட்டு தாக்குதல்; இளைஞர் பலி தப்பியோடிய சந்தேக நபர்கள் களுத்துறை - மத்துகம, அம்பருல்லகஹவத்த பகுதியில் தந்தை மற்றும் மகன் மீது மற்றொரு குழுவினர் வாளால் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதை அடுத்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று (11) இரவு இந்த தாக்குதல் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த தந்தை மற்றும் மகன் களுத்துறையில் உள்ள நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு சிகிச்சை பலனின்றி மகன் உயிரிழந்துள்ளார்.யடிதோல, நாவுத்துடுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவரே காயமடைந்தவர் ஆவார்.  குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்ய மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement