• Apr 30 2025

மட்டக்களப்பில் குடத்தால் அடித்துக் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்! - கொலையாளியை தேடும் பொலிஸ்

Thansita / Apr 9th 2025, 8:24 pm
image

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரில்லாவெளி கிராம சேவகர் பிரிவு  பள்ளத்துச்சேனை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர்  அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சித்தாண்டி 4 பழைய சந்தை வீதியைச்சேர்ந்த 63 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை தாமோதரன் என்பவரே மேற்படி அடித்து கொலை செய்யப்பட்டவராவர்.

குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருகையில் 

இரு நபர்களுக்கிடையே நேற்று இரவு  இடம்பெற்ற வாய்த்தக்கம் கைககலப்பாக மாறிய நிலையில், அருகிலிருந்த தண்ணீர் குடமொன்றினால்  குறித்த குடும்பஸ்தர் பலமாக தாக்கப்பட்டுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே குறித்த நபர்  உயிரிழந்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த இடத்திற்கு வருகைதந்த தடயவியல் பொலிசார், சடலத்தை பார்வையிட்டதுடன் தடையங்களை பெற்றுக்கொண்டனர்.

பின்னர்  வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சகாப்டீண் சம்பவ இடத்துக்கு வருகைதந்து சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர்   சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பணித்திருந்தார். 

குறித்த சம்பவத்துடன்  தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்குரிய நடவடிக்கையை வாழைச்சேனை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பில் குடத்தால் அடித்துக் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் - கொலையாளியை தேடும் பொலிஸ் மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரில்லாவெளி கிராம சேவகர் பிரிவு  பள்ளத்துச்சேனை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர்  அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.சித்தாண்டி 4 பழைய சந்தை வீதியைச்சேர்ந்த 63 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை தாமோதரன் என்பவரே மேற்படி அடித்து கொலை செய்யப்பட்டவராவர்.குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருகையில் இரு நபர்களுக்கிடையே நேற்று இரவு  இடம்பெற்ற வாய்த்தக்கம் கைககலப்பாக மாறிய நிலையில், அருகிலிருந்த தண்ணீர் குடமொன்றினால்  குறித்த குடும்பஸ்தர் பலமாக தாக்கப்பட்டுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே குறித்த நபர்  உயிரிழந்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.குறித்த இடத்திற்கு வருகைதந்த தடயவியல் பொலிசார், சடலத்தை பார்வையிட்டதுடன் தடையங்களை பெற்றுக்கொண்டனர்.பின்னர்  வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சகாப்டீண் சம்பவ இடத்துக்கு வருகைதந்து சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர்   சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பணித்திருந்தார். குறித்த சம்பவத்துடன்  தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்குரிய நடவடிக்கையை வாழைச்சேனை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement