• Sep 10 2025

குருக்கள் மட புதைகுழி அகழ்வு ஒக்டோபரில் ஆரம்பம்; நீதியமைச்சர் ஹர்ஷண தெரிவிப்பு!

shanuja / Sep 10th 2025, 6:21 pm
image

மட்டக்களப்பு- குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் புதைகுழி அகழ்வுப்பணி எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகும்  என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.



பாராளுமன்றத்தில் நேற்று (09) நிலையியற் கட்டளை 27/ 2 இன் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.யான எம். எல். ஏ.எம் ஹிஸ்புல்லா எம்.பி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.



1990 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் குருக்கள் மடம் கிராமத்தில் மக்கா சென்று திரும்பிய முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று படுகொலை செய்துள்ளனர். 


இது தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் அதனையடுத்து நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதன்போது சர்வதேச நியதிகளுக்கு அமைய அதனை அகழ்வு செய்து விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது அதற்கமைய அது தொடர்பிலான நடவடிக்கைகள் எப்போது ஆரம்பிக்கப்படும் எனக் கேட்டுள்ளார்.


இதற்கு பதிலளித்த நீதியமைச்சர்,


குறித்த  சம்பவம் தொடர்பில் அரசாங்கம் முழுமையான கவனத்தை செலுத்தியுள்ளது. அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவிகளையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். 


நீதி அமைச்சிடம் போதிய நிதி உள்ளதால் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட நிபுணர்களின் மதிப்பீட்டுக்கு இணங்க நிதியை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.



நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட நடைமுறைகளுக்கு இணங்க வெளிப்படைத்தன்மையுடன் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 


அதற்கான நடவடிக்கைகளில் இழப்பீட்டு அலுவலகம் மற்றும் காணாமற் போனோர் அலுவலகம் காத்திரமான செயற்பாடுகளை மேற்கொள்ளும். அதற்காக தேவைப்படும் அனைத்தையும் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் அரசாங்கம் ஒரு போதும் பின்னிற்காது.


கைகள் படாத வகையில் பாரிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிபுணர்கள் கூறும் எத்தகைய உபகரணங்களையும் பயன்படுத்தி அந்த உடல்கள் அகழப்பட்டு உரிய சமூகத்தின் முறைப்படி இறுதிக்கிரியைகளை கௌரவத்துடன் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். 


படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் மதத்தலைவர்களை கௌரவிக்கும் வகையில் மத அனுஷ்டானங்களுக்கு இணங்க அந்த இறுதிக் கிரியைகள் நடத்தப்படும்.


மேற்படி நடவடிக்கைகளில் இரகசியத் தன்மைகளை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படுவதுடன் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இந்த நடவடிக்கைகள் நீதி நியாயம் பின்பற்றப்பட்டு மேற்கொள்ளப்படும். 


அந்த வகையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனினும் இக்காலங்களில் மழை பெய்யக் கூடாது என்று நாம் பிரார்த்தித்துக் கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

குருக்கள் மட புதைகுழி அகழ்வு ஒக்டோபரில் ஆரம்பம்; நீதியமைச்சர் ஹர்ஷண தெரிவிப்பு மட்டக்களப்பு- குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் புதைகுழி அகழ்வுப்பணி எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகும்  என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் நேற்று (09) நிலையியற் கட்டளை 27/ 2 இன் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.யான எம். எல். ஏ.எம் ஹிஸ்புல்லா எம்.பி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.1990 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் குருக்கள் மடம் கிராமத்தில் மக்கா சென்று திரும்பிய முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று படுகொலை செய்துள்ளனர். இது தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் அதனையடுத்து நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதன்போது சர்வதேச நியதிகளுக்கு அமைய அதனை அகழ்வு செய்து விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது அதற்கமைய அது தொடர்பிலான நடவடிக்கைகள் எப்போது ஆரம்பிக்கப்படும் எனக் கேட்டுள்ளார்.இதற்கு பதிலளித்த நீதியமைச்சர்,குறித்த  சம்பவம் தொடர்பில் அரசாங்கம் முழுமையான கவனத்தை செலுத்தியுள்ளது. அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவிகளையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். நீதி அமைச்சிடம் போதிய நிதி உள்ளதால் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட நிபுணர்களின் மதிப்பீட்டுக்கு இணங்க நிதியை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட நடைமுறைகளுக்கு இணங்க வெளிப்படைத்தன்மையுடன் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான நடவடிக்கைகளில் இழப்பீட்டு அலுவலகம் மற்றும் காணாமற் போனோர் அலுவலகம் காத்திரமான செயற்பாடுகளை மேற்கொள்ளும். அதற்காக தேவைப்படும் அனைத்தையும் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் அரசாங்கம் ஒரு போதும் பின்னிற்காது.கைகள் படாத வகையில் பாரிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிபுணர்கள் கூறும் எத்தகைய உபகரணங்களையும் பயன்படுத்தி அந்த உடல்கள் அகழப்பட்டு உரிய சமூகத்தின் முறைப்படி இறுதிக்கிரியைகளை கௌரவத்துடன் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் மதத்தலைவர்களை கௌரவிக்கும் வகையில் மத அனுஷ்டானங்களுக்கு இணங்க அந்த இறுதிக் கிரியைகள் நடத்தப்படும்.மேற்படி நடவடிக்கைகளில் இரகசியத் தன்மைகளை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படுவதுடன் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இந்த நடவடிக்கைகள் நீதி நியாயம் பின்பற்றப்பட்டு மேற்கொள்ளப்படும். அந்த வகையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனினும் இக்காலங்களில் மழை பெய்யக் கூடாது என்று நாம் பிரார்த்தித்துக் கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement