கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்தேறிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் எதிர்காலம் கருதியும், அவர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்கும் நோக்கிலும் ஜேர்மன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், கிளிநொச்சி அறிவியல்நகரில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் சுயாதீன இயங்கு நிலையை உறுதிசெய்யுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27.2 இன் கீழ், பாராளுமன்றக் குழுத் தலைவராக, பிரதம அமைச்சரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களிடம் வாய்மொழி மூல விடைக்கான வினாக்களை முன்வைக்கும் போதே அவர் இவ்விடயம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்விடயம் சார்ந்து, கடந்த 2025.05.29 ஆம் திகதி அமைச்சருக்கு தன்னால்; அனுப்பிவைக்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்தையும் மேற்கோள் காட்டி,
கிளிநொச்சியில் இயங்கும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் எத்தனை தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் தற்போது பயிற்சி பெறுகிறார்கள் என்பதையும், அவர்கள் எந்த அடிப்படையில் பயிற்சிநெறிகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்கள் என்பதையும், தற்போது என்னென்ன பயிற்சிநெறிகள் நடைமுறையில் உள்ளன என்பதையும் அமைச்சர் இச்சபைக்கு அறிவிக்க வேண்டும்.
வளத்திலும், தரத்திலும் மிகவும் தாழ்நிலையிலுள்ள கிளிநொச்சி மாவட்ட SLGTTI நிறுவனத்தை அங்கீகரிப்பதற்கான அரசாங்க வர்த்தமானி ஏன் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறித்தும், இந்நிறுவனத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் பௌதீக வள மற்றும் ஆளணிப் பற்றாக்குறைகள் எப்போது நிவர்த்தி செய்யப்படும் என்பது குறித்தும் அமைச்சரால் பதிலளிக்க முடியுமா? என கேள்வி எழுப்பியதுடன், இந்நிறுவனம் உருவாக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீனமாகவும், தனித்தன்மையோடும் இயங்குவதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், இந்த நிறுவனத்தை அங்கீகரிப்பதற்கான அரசாங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கும் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்றார்.
ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் இயங்கு நிலையை உறுதி செய்க- சபையில் சிறிதரன் வலியுறுத்து. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்தேறிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் எதிர்காலம் கருதியும், அவர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்கும் நோக்கிலும் ஜேர்மன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், கிளிநொச்சி அறிவியல்நகரில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் சுயாதீன இயங்கு நிலையை உறுதிசெய்யுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27.2 இன் கீழ், பாராளுமன்றக் குழுத் தலைவராக, பிரதம அமைச்சரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களிடம் வாய்மொழி மூல விடைக்கான வினாக்களை முன்வைக்கும் போதே அவர் இவ்விடயம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.இவ்விடயம் சார்ந்து, கடந்த 2025.05.29 ஆம் திகதி அமைச்சருக்கு தன்னால்; அனுப்பிவைக்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்தையும் மேற்கோள் காட்டி,கிளிநொச்சியில் இயங்கும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் எத்தனை தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் தற்போது பயிற்சி பெறுகிறார்கள் என்பதையும், அவர்கள் எந்த அடிப்படையில் பயிற்சிநெறிகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்கள் என்பதையும், தற்போது என்னென்ன பயிற்சிநெறிகள் நடைமுறையில் உள்ளன என்பதையும் அமைச்சர் இச்சபைக்கு அறிவிக்க வேண்டும்.வளத்திலும், தரத்திலும் மிகவும் தாழ்நிலையிலுள்ள கிளிநொச்சி மாவட்ட SLGTTI நிறுவனத்தை அங்கீகரிப்பதற்கான அரசாங்க வர்த்தமானி ஏன் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறித்தும், இந்நிறுவனத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் பௌதீக வள மற்றும் ஆளணிப் பற்றாக்குறைகள் எப்போது நிவர்த்தி செய்யப்படும் என்பது குறித்தும் அமைச்சரால் பதிலளிக்க முடியுமா என கேள்வி எழுப்பியதுடன், இந்நிறுவனம் உருவாக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீனமாகவும், தனித்தன்மையோடும் இயங்குவதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், இந்த நிறுவனத்தை அங்கீகரிப்பதற்கான அரசாங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கும் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்றார்.