• May 15 2025

மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆனையிறவு உப்பு..!

Sharmi / May 15th 2025, 12:12 pm
image

அண்மையில் ஆனையிறவு உப்பளமானது ஆளும் தரப்பினரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆனையிறவு உப்பு என்ற பெயரில் பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட உப்பானது ரஜ உப்பு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த செயற்பாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் மீண்டும் ஆனையிறவு உப்பு என பெயர்மாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கணநாதன் இளங்குமரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி உள்ளிட்ட ஆளும் தரப்பினர் தெரிவித்தனர்.

இருப்பினும் குறித்த உப்பானது ரஜ உப்பு என்ற பெயரிலேயே விநியோகம் செய்யப்படுகின்ற விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வலி வடக்கு வடபகுதி பல நோக்கு கூட்டுறவு சங்கம் ஊடாக நியாயமான விலையில் உப்பு விநியோகம் இடம்பெறுவதாகவும், அது தனது வேண்டுகோள் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அந்த உப்பு பைகளை வலி வடக்கு வடபகுதி பல நோக்கு கூட்டுறவு சங்கம் தமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அதில் ரஜ உப்பு என்றே காணப்படுகிறது. இந்த விடயமானது ஆளும் தரப்பினர் மீது மக்களுக்கு மிகுந்த எதிர்ப்பையும், நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர்களும், ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெடர்ந்து பொய்யுரைத்து வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த உப்பின் பெயர்  ஆனையிறவு உப்பு என இன்னமும் மாற்றம் செய்யப்படவில்லை என, ஆனையிறவு உப்பளத்தில் நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆனையிறவு உப்பு. அண்மையில் ஆனையிறவு உப்பளமானது ஆளும் தரப்பினரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆனையிறவு உப்பு என்ற பெயரில் பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட உப்பானது ரஜ உப்பு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.இந்த செயற்பாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் மீண்டும் ஆனையிறவு உப்பு என பெயர்மாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கணநாதன் இளங்குமரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி உள்ளிட்ட ஆளும் தரப்பினர் தெரிவித்தனர்.இருப்பினும் குறித்த உப்பானது ரஜ உப்பு என்ற பெயரிலேயே விநியோகம் செய்யப்படுகின்ற விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.வலி வடக்கு வடபகுதி பல நோக்கு கூட்டுறவு சங்கம் ஊடாக நியாயமான விலையில் உப்பு விநியோகம் இடம்பெறுவதாகவும், அது தனது வேண்டுகோள் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.அந்த உப்பு பைகளை வலி வடக்கு வடபகுதி பல நோக்கு கூட்டுறவு சங்கம் தமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் ரஜ உப்பு என்றே காணப்படுகிறது. இந்த விடயமானது ஆளும் தரப்பினர் மீது மக்களுக்கு மிகுந்த எதிர்ப்பையும், நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர்களும், ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெடர்ந்து பொய்யுரைத்து வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.அத்துடன் குறித்த உப்பின் பெயர்  ஆனையிறவு உப்பு என இன்னமும் மாற்றம் செய்யப்படவில்லை என, ஆனையிறவு உப்பளத்தில் நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement