• Jul 10 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பிள்ளையானுக்கு தொடர்புள்ளதா?

shanuja / Jul 10th 2025, 8:46 am
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), முழுமையாக அறிந்திருந்தமை தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், ஏப்ரல் 21 தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தமையை அவர் முழுமையாக அறிந்திருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.


ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்பு வேளை விவாதம்  இடம்பெற்ற போது உரையாற்றிய  அமைச்சர்  இதனை வெளிப்படுத்தியுள்ளார். 


இதேவேளை, 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமைக்கும் ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் தொடர்புள்ளதென அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். 


மேலும் ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் செனல் 4 ஊடகத்திற்கு பல தகவல்களை வழங்கிய பிள்ளையானின் நெருங்கிய சகாவான அசாத் மௌலானாவை நாட்டிற்கு அழைத்துவந்து விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பிள்ளையானுக்கு தொடர்புள்ளதா உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), முழுமையாக அறிந்திருந்தமை தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், ஏப்ரல் 21 தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தமையை அவர் முழுமையாக அறிந்திருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்பு வேளை விவாதம்  இடம்பெற்ற போது உரையாற்றிய  அமைச்சர்  இதனை வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை, 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமைக்கும் ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் தொடர்புள்ளதென அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் செனல் 4 ஊடகத்திற்கு பல தகவல்களை வழங்கிய பிள்ளையானின் நெருங்கிய சகாவான அசாத் மௌலானாவை நாட்டிற்கு அழைத்துவந்து விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement