அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான மழையால், குவாடலூப் நதியின் வெள்ளப் பெருக்குடன் ஏற்பட்ட பேரழிவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 20 குழந்தைகள் உட்பட பலர் காணாமல் போயுள்ளனர்.
டெக்சாஸில் நேற்றைய தினம் பெய்த பலத்த மழை காரணமாக, இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில் 20 குழந்தைகள் உட்பட மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு உத்தியோகபூர்வ தகவல்கள் கூறுகின்றன.
மழை தொடங்கிய 45 நிமிடங்களில் நதி 26 அடி உயரத்தில் வெள்ளம் வீசியதாகவும், திடீரென ஏற்பட்ட வெள்ளம் வீடுகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்களை அழித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு பணியில் 14 உலங்கு வானூர்திகள், 12 ட்ரோன்கள், ஒன்பது குழுக்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட மீட்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
அரச அதிகாரிகள் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு. பலர் பலி - 20 குழந்தைகள் மாயம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான மழையால், குவாடலூப் நதியின் வெள்ளப் பெருக்குடன் ஏற்பட்ட பேரழிவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 20 குழந்தைகள் உட்பட பலர் காணாமல் போயுள்ளனர்.டெக்சாஸில் நேற்றைய தினம் பெய்த பலத்த மழை காரணமாக, இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில் 20 குழந்தைகள் உட்பட மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு உத்தியோகபூர்வ தகவல்கள் கூறுகின்றன.மழை தொடங்கிய 45 நிமிடங்களில் நதி 26 அடி உயரத்தில் வெள்ளம் வீசியதாகவும், திடீரென ஏற்பட்ட வெள்ளம் வீடுகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்களை அழித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மீட்பு பணியில் 14 உலங்கு வானூர்திகள், 12 ட்ரோன்கள், ஒன்பது குழுக்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட மீட்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். அரச அதிகாரிகள் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.