பண்டாரவளை பூணாகலை கபரகலையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் செவவாய்க்கிழமை (17) நேரில் சென்று பார்வையிட்டார்.
வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர் பிரதீப் கருத்து தெரிவிக்கையில்,
இவ்வீட்டுத் திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற 50 வீடுகளை பயனாளிகளுக்குக் கையளிக்கவுள்ளோம். இதனை வருடத்தின் ஆரம்பத்திலேயே பயனாளிகளுக்கு வழங்குவதற்கு உத்தேசித்திருந்த போதிலும் நாட்டில் ஏற்பட்ட டித்வா பேரிடர் காரணமாக தாமதம் ஏற்பட்டது எனக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் முழுமையான நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படுகின்ற இவ்வீட்டுத் திட்டத்தின் சுற்றுப்புறச் சூழலை அழகுபடுத்துவதற்கு இலங்கையில் உள்ள சிவில் அமைப்புகள், சமூக நல அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளதோடு அது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த 4ஆம் திகதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் அந்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பூணாகலை கபரகலைக்கு விஜயம் செய்தனர்.
இதன்போது பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், சிவில் சமூக அமைப்புகளுடனும் பயனாளிகளுடனும் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.
வீடுகளை கையளிக்கும் முன் அதன் சுற்றுப்புறச் சூழலை அழகுபடுத்தி சகல வசதிகளுடன் கூடிய ஓர் அழகிய சூழலில் அந்த மக்களைக் குடியமர்த்துவதற்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன்வந்திருந்தன. அதனடிப்படையில் பூந்தோட்டங்கள், நூலகம், வீடுகளுக்கான முகவரி, பெயர் பலகைகள் என்பன சிவில் சமூக அமைப்புகளால் மேற்கொள்ளவிருப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டாரவின் கள ஆய்வு உத்தியோகத்தர் மகேந்திரன், பூணாகலை தொகுதியின் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், கட்டுமான பணியினை மேற்கொள்கின்ற இராணுவத்தின் கேர்னல் உட்பட இராணுவ அதிகாரிகள் பிரதி அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் வசந்தமூர்த்தி ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
கபரகலை வீட்டுத்திட்டப் பகுதிக்கு பிரதி அமைச்சர் பிரதீப் கண்காணிப்பு விஜயம் பண்டாரவளை பூணாகலை கபரகலையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் செவவாய்க்கிழமை (17) நேரில் சென்று பார்வையிட்டார்.வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர் பிரதீப் கருத்து தெரிவிக்கையில்,இவ்வீட்டுத் திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற 50 வீடுகளை பயனாளிகளுக்குக் கையளிக்கவுள்ளோம். இதனை வருடத்தின் ஆரம்பத்திலேயே பயனாளிகளுக்கு வழங்குவதற்கு உத்தேசித்திருந்த போதிலும் நாட்டில் ஏற்பட்ட டித்வா பேரிடர் காரணமாக தாமதம் ஏற்பட்டது எனக் குறிப்பிட்டார்.அரசாங்கத்தின் முழுமையான நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படுகின்ற இவ்வீட்டுத் திட்டத்தின் சுற்றுப்புறச் சூழலை அழகுபடுத்துவதற்கு இலங்கையில் உள்ள சிவில் அமைப்புகள், சமூக நல அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளதோடு அது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த 4ஆம் திகதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந்நிலையில் அந்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பூணாகலை கபரகலைக்கு விஜயம் செய்தனர். இதன்போது பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், சிவில் சமூக அமைப்புகளுடனும் பயனாளிகளுடனும் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.வீடுகளை கையளிக்கும் முன் அதன் சுற்றுப்புறச் சூழலை அழகுபடுத்தி சகல வசதிகளுடன் கூடிய ஓர் அழகிய சூழலில் அந்த மக்களைக் குடியமர்த்துவதற்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன்வந்திருந்தன. அதனடிப்படையில் பூந்தோட்டங்கள், நூலகம், வீடுகளுக்கான முகவரி, பெயர் பலகைகள் என்பன சிவில் சமூக அமைப்புகளால் மேற்கொள்ளவிருப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டாரவின் கள ஆய்வு உத்தியோகத்தர் மகேந்திரன், பூணாகலை தொகுதியின் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், கட்டுமான பணியினை மேற்கொள்கின்ற இராணுவத்தின் கேர்னல் உட்பட இராணுவ அதிகாரிகள் பிரதி அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் வசந்தமூர்த்தி ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.