ரயில் பாதையின் அடியில் உள்ள மதகு, உடைந்துள்ளதால் அம்பேபுஸ்ஸ - அலவ்வ பிரதேசங்களுக்கிடையில் ரயில் சேவை ஒருவழிப் பாதையில் இயங்குவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் பிரதான மார்க்கத்தில் ரயில் தாமதமாக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, ரயில் தண்டவாளத்தின் கீழ் சுமார் 45 அடி ஆழமான பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரயில் தண்டவாளத்தில் இருந்த தடைகளை அகற்றி, ரயில்வே திணைக்களம் ரயில் பாதையை மீண்டும் சீரமைக்க நடவடிக்கை எடுத்திருந்தது.
தற்போது, புனர்நிர்மாண வேலைகள் காரணமாக அம்பேபுஸ்ஸ - அலவ்வவுக்கு இடையில் ரயில் சேவை ஒருவழிப் பாதையில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பிரதான மார்க்கத்தில் பயணத் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்று முதல் பிரதான மார்க்கத்தில் சில அலுவலக ரயில் சேவைகளை வழமைபோல் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம் – ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு ரயில் பாதையின் அடியில் உள்ள மதகு, உடைந்துள்ளதால் அம்பேபுஸ்ஸ - அலவ்வ பிரதேசங்களுக்கிடையில் ரயில் சேவை ஒருவழிப் பாதையில் இயங்குவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனால் பிரதான மார்க்கத்தில் ரயில் தாமதமாக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, ரயில் தண்டவாளத்தின் கீழ் சுமார் 45 அடி ஆழமான பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, ரயில் தண்டவாளத்தில் இருந்த தடைகளை அகற்றி, ரயில்வே திணைக்களம் ரயில் பாதையை மீண்டும் சீரமைக்க நடவடிக்கை எடுத்திருந்தது.தற்போது, புனர்நிர்மாண வேலைகள் காரணமாக அம்பேபுஸ்ஸ - அலவ்வவுக்கு இடையில் ரயில் சேவை ஒருவழிப் பாதையில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பிரதான மார்க்கத்தில் பயணத் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று முதல் பிரதான மார்க்கத்தில் சில அலுவலக ரயில் சேவைகளை வழமைபோல் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.