• Jun 25 2025

ஜெயவர்த்தனபுர பல்கலை விடுதி சேதம் - மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட பண அபராதம் நியாயமற்ற செயல்! - கோப் குழு

shanuja / Jun 24th 2025, 9:11 pm
image

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக விடுதியை சேதப்படுத்திய மாணவர்கள் மீது விதிக்கப்பட்ட பண அபராதம் பல்கலை நிர்வாகத்தின் நியாயமற்ற செயலாகும் என்று கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது. 


இது தொடர்பில் கோப் குழு தெரிவிக்கையில், 


மாணவர் மோதலால் பல்கலைக்கழக விடுதிக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பத்து மாணவர்களுக்கு அநியாயமாக பண அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


வசூலிக்கப்பட்ட தொகை சேதமடைந்த பல்கலைக்கழக சொத்தின் உண்மையான மதிப்பை விட மூன்று மடங்கு அதிகம் . இது சட்டப்பூர்வமாக வசூலிக்கக்கூடிய அதிகபட்ச தொகை. கூடுதலாக 25% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. 


அதன்படி, கட்டணங்களை கணக்கிடுவதில் பிழை இருந்தால், அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார்.


மோதலில் ஈடுபட்ட ஒரு தரப்பினருக்கு மட்டுமே அபராதம் விதிப்பதன் நியாயத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளுக்கு  கோப்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயவர்த்தனபுர பல்கலை விடுதி சேதம் - மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட பண அபராதம் நியாயமற்ற செயல் - கோப் குழு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக விடுதியை சேதப்படுத்திய மாணவர்கள் மீது விதிக்கப்பட்ட பண அபராதம் பல்கலை நிர்வாகத்தின் நியாயமற்ற செயலாகும் என்று கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் கோப் குழு தெரிவிக்கையில், மாணவர் மோதலால் பல்கலைக்கழக விடுதிக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பத்து மாணவர்களுக்கு அநியாயமாக பண அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வசூலிக்கப்பட்ட தொகை சேதமடைந்த பல்கலைக்கழக சொத்தின் உண்மையான மதிப்பை விட மூன்று மடங்கு அதிகம் . இது சட்டப்பூர்வமாக வசூலிக்கக்கூடிய அதிகபட்ச தொகை. கூடுதலாக 25% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. அதன்படி, கட்டணங்களை கணக்கிடுவதில் பிழை இருந்தால், அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார்.மோதலில் ஈடுபட்ட ஒரு தரப்பினருக்கு மட்டுமே அபராதம் விதிப்பதன் நியாயத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளுக்கு  கோப்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement