வீட்டிலிருந்து சம்பாதிக்க முடியும் என கூறி சமூக ஊடகங்கள் ஊடாக பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Facebook, WhatsApp, Telegram, Skype, மற்றும் WeChat போன்ற சமூக ஊடகங்கள் மூலம் குறிவைத்து நடத்தப்படும் நிதி குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது.
வங்கி கணக்குகளில் சிறிய பணத்தொகையை முதலீடு செய்தால் அதன் ஊடாக இலாபம் பெறலாம் என சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி, சிறிய பணத்தொகையை முதலீடு செய்த நபர்களுக்கு பெருமளவிலான பணத்தை வழங்கி,
அதிகளவிலான இலாபத்தை பெற்றுக்கொடுத்து அவர்களின் நம்பிக்கையை வென்ற பின்னர், விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் பெரியளவிலான பணத்தொகையை முதலீடு செய்யுமாறு கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர்.
இதனை அறியாத மக்கள் சிறிய பணத்தொகையை முதலீடு செய்ததால் கிடைத்த அதிகளவிலான இலாபத்தை நம்பி பெரியளவிலான பணத்தொகையை முதலீடு செய்து ஏமாறுகின்றனர்.
இந்த மோசடிகள் பெரும்பாலும் இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் செயல்படும் தனிநபர்களால் திட்டமிடப்படுகின்றன,
கண்டறிதலைத் தவிர்க்க அதிநவீன டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
மேற்குறிப்பிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வீட்டில் இருந்து வேலை செய்து பெரும் தொகையை சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களையும் வெளியிடுகின்றனர்.
இதற்கு இணைந்தவர்களின் வங்கிக் கணக்கு எண்களைப் பெற்று, அவர்களின் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும் பணத்தை குற்றவாளிகள் குறிப்பிடும் வேறு கணக்குகளுக்கு மாற்றுமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிவுறுத்துகின்றனர்.
இந்நிலையில சமூக ஊடகங்களில் கோரப்படாத செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம், தெரியாத இணைப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளைத் தவிர்க்கவும், தனிப்பட்ட வங்கி விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும், தெரியாத நபர்களின் சார்பாக ஒருபோதும் பணத்தை மாற்ற வேண்டாம் என்றும் பொதுமக்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் சமூக ஊடகங்களில் பரவும் விளம்பரங்கள்; இலங்கை மக்களை கடுமையாக எச்சரிக்கும் பொலிஸார் வீட்டிலிருந்து சம்பாதிக்க முடியும் என கூறி சமூக ஊடகங்கள் ஊடாக பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Facebook, WhatsApp, Telegram, Skype, மற்றும் WeChat போன்ற சமூக ஊடகங்கள் மூலம் குறிவைத்து நடத்தப்படும் நிதி குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது.வங்கி கணக்குகளில் சிறிய பணத்தொகையை முதலீடு செய்தால் அதன் ஊடாக இலாபம் பெறலாம் என சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி, சிறிய பணத்தொகையை முதலீடு செய்த நபர்களுக்கு பெருமளவிலான பணத்தை வழங்கி,அதிகளவிலான இலாபத்தை பெற்றுக்கொடுத்து அவர்களின் நம்பிக்கையை வென்ற பின்னர், விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் பெரியளவிலான பணத்தொகையை முதலீடு செய்யுமாறு கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர்.இதனை அறியாத மக்கள் சிறிய பணத்தொகையை முதலீடு செய்ததால் கிடைத்த அதிகளவிலான இலாபத்தை நம்பி பெரியளவிலான பணத்தொகையை முதலீடு செய்து ஏமாறுகின்றனர்.இந்த மோசடிகள் பெரும்பாலும் இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் செயல்படும் தனிநபர்களால் திட்டமிடப்படுகின்றன, கண்டறிதலைத் தவிர்க்க அதிநவீன டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.மேற்குறிப்பிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வீட்டில் இருந்து வேலை செய்து பெரும் தொகையை சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களையும் வெளியிடுகின்றனர். இதற்கு இணைந்தவர்களின் வங்கிக் கணக்கு எண்களைப் பெற்று, அவர்களின் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும் பணத்தை குற்றவாளிகள் குறிப்பிடும் வேறு கணக்குகளுக்கு மாற்றுமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில சமூக ஊடகங்களில் கோரப்படாத செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம், தெரியாத இணைப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளைத் தவிர்க்கவும், தனிப்பட்ட வங்கி விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும், தெரியாத நபர்களின் சார்பாக ஒருபோதும் பணத்தை மாற்ற வேண்டாம் என்றும் பொதுமக்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.