• Apr 19 2026

மீண்டும் உயரும் சமையல் எரிவாயு விலை! லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

Chithra / Mar 24th 2026, 12:52 pm
image

சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்குள் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன தெரிவித்தார்.


எதிர்வரும் மே மாதம் வரையில் போதுமான கையிருப்பு உள்ளதாகவும், அதன்படி, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல் விரைவில் நாட்டை வந்தடையும் எனவும் லிட்ரோ நிறுவனத் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


எவ்வாறாயினும், சர்வதேச சந்தையில் எரிசக்தி உற்பத்திக்கு நிலவும் கேள்வியின் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி புதிய விலை அதிகரிக்கப்படும் என  சுட்டிக்காட்டியுள்ளார்.

மீண்டும் உயரும் சமையல் எரிவாயு விலை லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்குள் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன தெரிவித்தார்.எதிர்வரும் மே மாதம் வரையில் போதுமான கையிருப்பு உள்ளதாகவும், அதன்படி, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல் விரைவில் நாட்டை வந்தடையும் எனவும் லிட்ரோ நிறுவனத் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.எவ்வாறாயினும், சர்வதேச சந்தையில் எரிசக்தி உற்பத்திக்கு நிலவும் கேள்வியின் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி புதிய விலை அதிகரிக்கப்படும் என  சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement