• Apr 17 2026

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு!

shanu / Apr 2nd 2026, 5:06 pm
image

 


கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக படகு மற்றும் வலைகளை இழந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நன்னீர் மீனவர்களுக்கான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 



இழப்பீட்டுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு தேசிய உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர். பி.நிருபராஜ் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. 


குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தார். 


குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன்,தேசிய உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் படகுகளை இழந்த 63மீனவர்களுக்கு 63000000ரூபா பெறுமதியான காசோலையும் ,கிளிநொச்சி மாவட்டத்தில் படகுகளை இழந்த 40மீனவர்களுக்கு 4000000ரூபா பெறுமதியான காசோலையும் வழங்கப்பட்டன.


 இதே வேளை வலைகளை இழந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த 237மீனவர்களுக்கு 16560000ரூபா பெறுமதியான காசோலையும், கிளிநொச்சி மாவட்டத்தில் வலைகளை இழந்த 214மீனவர்களுக்கு 12855000ரூபா பெறுமதியான காசோலைகளும் வழங்கப்பட்டன.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு  கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக படகு மற்றும் வலைகளை இழந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நன்னீர் மீனவர்களுக்கான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இழப்பீட்டுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு தேசிய உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர். பி.நிருபராஜ் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன்,தேசிய உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் படகுகளை இழந்த 63மீனவர்களுக்கு 63000000ரூபா பெறுமதியான காசோலையும் ,கிளிநொச்சி மாவட்டத்தில் படகுகளை இழந்த 40மீனவர்களுக்கு 4000000ரூபா பெறுமதியான காசோலையும் வழங்கப்பட்டன. இதே வேளை வலைகளை இழந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த 237மீனவர்களுக்கு 16560000ரூபா பெறுமதியான காசோலையும், கிளிநொச்சி மாவட்டத்தில் வலைகளை இழந்த 214மீனவர்களுக்கு 12855000ரூபா பெறுமதியான காசோலைகளும் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement