• Mar 14 2026

கொழும்பு – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

Chithra / Dec 29th 2025, 8:24 am
image

 

புத்தளம் ரயில் மார்க்கத்தில் குறிப்பாக கொழும்பு கோட்டைக்கும் சிலாபத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பேரழிவினால் பாதிக்கப்பட்ட மார்க்கத்தின் தண்டவாளப் பகுதியில் பழுதுபார்க்கும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சிலாபம் வரையிலான ரயில்களை மீண்டும் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் மாதம் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குடவேவ மற்றும் மாதம்பே ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள கடுபிட்டி ஓயா பாலத்திற்கு அருகிலுள்ள ரயில் பாதையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து, கொழும்பு கோட்டைக்கும் சிலாபம்/புத்தளம் இடையேயான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இதனால், கடந்த சில வாரங்களாக சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என்று ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டது. 

இந்தப் பாதையில் நாத்தாண்டியா ரயில் நிலையம் வரை மட்டுமே இந்த ரயில்கள் இயக்கப்பட்டன.


கொழும்பு – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்  புத்தளம் ரயில் மார்க்கத்தில் குறிப்பாக கொழும்பு கோட்டைக்கும் சிலாபத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.பேரழிவினால் பாதிக்கப்பட்ட மார்க்கத்தின் தண்டவாளப் பகுதியில் பழுதுபார்க்கும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சிலாபம் வரையிலான ரயில்களை மீண்டும் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.நவம்பர் மாதம் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குடவேவ மற்றும் மாதம்பே ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள கடுபிட்டி ஓயா பாலத்திற்கு அருகிலுள்ள ரயில் பாதையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து, கொழும்பு கோட்டைக்கும் சிலாபம்/புத்தளம் இடையேயான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.இதனால், கடந்த சில வாரங்களாக சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என்று ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டது. இந்தப் பாதையில் நாத்தாண்டியா ரயில் நிலையம் வரை மட்டுமே இந்த ரயில்கள் இயக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement