• Jun 07 2025

மூதூரில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு..!

Sharmi / Jun 6th 2025, 5:02 pm
image

கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மூதூர் -கணேசபுரம் குப்பை மேட்டினை அண்டிய காட்டுப்பகுதி இன்று (06) சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டது.


தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளை,பிரதேச பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இச் சிரமதானத்தை முன்னெடுத்திருந்தன


இதன்போது கடந்த வாரம் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்த வீதிக்கு அருகிலுள்ள காடுகள் வெட்டப்பட்டு சிரமதானம் செய்யப்பட்டது.


இச் சிரமதான பணிக்கு மூதூர் பிரதேச செயலகம்,பொலிஸார்,கிராம அபிவிருத்திச் சங்கம் அனுசரனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சிரமதான இடத்திற்கு மூதூர் பிரதேச சபையின் செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச அமைப்பாளர், சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கிராம உத்தியோகத்தர்கள்,சமூர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





மூதூரில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு. கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மூதூர் -கணேசபுரம் குப்பை மேட்டினை அண்டிய காட்டுப்பகுதி இன்று (06) சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டது.தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளை,பிரதேச பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இச் சிரமதானத்தை முன்னெடுத்திருந்தனஇதன்போது கடந்த வாரம் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்த வீதிக்கு அருகிலுள்ள காடுகள் வெட்டப்பட்டு சிரமதானம் செய்யப்பட்டது.இச் சிரமதான பணிக்கு மூதூர் பிரதேச செயலகம்,பொலிஸார்,கிராம அபிவிருத்திச் சங்கம் அனுசரனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.சிரமதான இடத்திற்கு மூதூர் பிரதேச சபையின் செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச அமைப்பாளர், சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கிராம உத்தியோகத்தர்கள்,சமூர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement