• May 01 2026

செம்மணி புதைகுழி வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு

dorin / Jan 19th 2026, 8:06 pm
image

செம்மணி புதைகுழி வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் தலைமையில் சட்டத்தரணிகள், காணாமல் போனோர் அலுவலக சட்டத்தரணிகள், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்துமயான நிர்வாகத்தினர் அகழ்வு இடத்தை நேரில் பார்வையிட்டனர். 

அகழ்வு பகுதி முழுவதும் வெள்ளநீர் தேங்கியுள்ளதால்இ நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நல்லூர் பிரதேச சபை மூலம் பெப்ரவரி 9ஆம் திகதி வெள்ளநீர் அகற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது . 

வழக்கு மீண்டும் பெப்ரவரி 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

செம்மணி புதைகுழி வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு செம்மணி புதைகுழி வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் தலைமையில் சட்டத்தரணிகள், காணாமல் போனோர் அலுவலக சட்டத்தரணிகள், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்துமயான நிர்வாகத்தினர் அகழ்வு இடத்தை நேரில் பார்வையிட்டனர். அகழ்வு பகுதி முழுவதும் வெள்ளநீர் தேங்கியுள்ளதால்இ நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நல்லூர் பிரதேச சபை மூலம் பெப்ரவரி 9ஆம் திகதி வெள்ளநீர் அகற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது . வழக்கு மீண்டும் பெப்ரவரி 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement