• May 17 2024

வவுனியாவில் மூன்று தனியார் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் இரத்து...!பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அதிரடி நடவடிக்கை...!

Sharmi / Apr 30th 2024, 3:13 pm
image

Advertisement

வவுனியாவிலிருந்து சேவையில் ஈடுபடும் மூன்று தனியார் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்துகள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூன்றுக்கு மேற்பட்ட விபத்துக்களை ஏற்படுத்தியமை, வீதியில் போட்டித் தன்மையில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இப் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் இச் செயற்பாடு மக்கள் மத்தியின் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளமையுடன், தொடர்ந்தும், பயணிகளின் சுதந்திரமான பயணத்திற்கு இடையூறு விளைவிக்கும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



வவுனியாவில் மூன்று தனியார் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் இரத்து.பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அதிரடி நடவடிக்கை. வவுனியாவிலிருந்து சேவையில் ஈடுபடும் மூன்று தனியார் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்துகள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மூன்றுக்கு மேற்பட்ட விபத்துக்களை ஏற்படுத்தியமை, வீதியில் போட்டித் தன்மையில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இப் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் இச் செயற்பாடு மக்கள் மத்தியின் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளமையுடன், தொடர்ந்தும், பயணிகளின் சுதந்திரமான பயணத்திற்கு இடையூறு விளைவிக்கும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement