• Jun 05 2025

கல்வித்துறையில் டிஜிட்டல் மாற்றத்திற்கான செயலணியொன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி..!

Sharmi / Jun 3rd 2025, 2:10 pm
image

கல்வித்துறைக்கான டிஜிட்டல் மாற்றத்திற்கு செயலணியொன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கையில் மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்கல் மற்றும் தரப்பண்பான கல்வியை வழங்குவதில் சிறந்த முன்னேற்றங்கள் அடையப் பெற்றுள்ளது. 

ஆனாலும், தற்போது  42,000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதும், கிராமி மற்றும் குறைந்த வசதிகளைக் கொண்ட பிரதேசங்களில் அதிகரித்து வருகின்ற ஏற்றத்தாழ்வுகளாலும் கல்வித்துறை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. 

இந்நிலைமையின் கீழ் கல்வித்துறையில் முறைமை ரீதியான மாற்றமொன்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. 

பெரும்பாலான நாடுகள் தமது கல்வி முறைமைகளில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக டிஜிட்டல் அனுகூலங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துகின்றன. 

இலங்கையிலும் பல்வேறு டிஜிட்டல் கல்விக்கான தொடக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பினும், அவை முறையாகக் கட்டமைக்கப்படாமையால் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது. 

அதனால், சமகால கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதனுடன் இணைந்துள்ள மூலோபாய டிஜிட்டல் அணுகுமுறையொன்றை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். 

அதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளரின் அங்கத்துவத்துடனும், ஏற்புடைய ஏனைய பங்காளர்களுடன் கூடிய கல்வித்துறை டிஜிட்டல் மாற்றம் பற்றிய செயலணியை நிறுவுவதற்காக கல்வி, உயர்கல்லி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 


கல்வித்துறையில் டிஜிட்டல் மாற்றத்திற்கான செயலணியொன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி. கல்வித்துறைக்கான டிஜிட்டல் மாற்றத்திற்கு செயலணியொன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இலங்கையில் மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்கல் மற்றும் தரப்பண்பான கல்வியை வழங்குவதில் சிறந்த முன்னேற்றங்கள் அடையப் பெற்றுள்ளது. ஆனாலும், தற்போது  42,000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதும், கிராமி மற்றும் குறைந்த வசதிகளைக் கொண்ட பிரதேசங்களில் அதிகரித்து வருகின்ற ஏற்றத்தாழ்வுகளாலும் கல்வித்துறை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலைமையின் கீழ் கல்வித்துறையில் முறைமை ரீதியான மாற்றமொன்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் தமது கல்வி முறைமைகளில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக டிஜிட்டல் அனுகூலங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துகின்றன. இலங்கையிலும் பல்வேறு டிஜிட்டல் கல்விக்கான தொடக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பினும், அவை முறையாகக் கட்டமைக்கப்படாமையால் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது. அதனால், சமகால கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதனுடன் இணைந்துள்ள மூலோபாய டிஜிட்டல் அணுகுமுறையொன்றை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். அதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளரின் அங்கத்துவத்துடனும், ஏற்புடைய ஏனைய பங்காளர்களுடன் கூடிய கல்வித்துறை டிஜிட்டல் மாற்றம் பற்றிய செயலணியை நிறுவுவதற்காக கல்வி, உயர்கல்லி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement